Published : 05 Apr 2020 12:40 PM
Last Updated : 05 Apr 2020 12:40 PM

ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! (ஏப்ரல் 6 முதல் 12 வரை)

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரோகிணி -
அதிக நன்மைகள் ஏற்படும் வாரம். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும்.
எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகப் பணியில் இயல்பான நிலையே இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப்பற்றாக்குறை நீங்கும்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை வராதிருந்த பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள்.
பெண்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். நீண்ட நாளாக வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். எதிர்காலத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு இன்று நம்பிக்கை தரக்கூடிய நாளாக அமையும்.
.

செவ்வாய் -
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அலுவலகத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

புதன் -
நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள். எதிர்பார்த்த அத்தனை உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

வியாழன்-
எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் பொறுமை காப்பது நல்லது. பேச்சுவார்த்தை இருந்தால் தள்ளி வையுங்கள். பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்த்து விடுங்கள்.

வெள்ளி -
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் மனநிறைவைத் தரும். அசையாச் சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள் பேசித் தீர்ப்பீர்கள்.

சனி-
குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவீர்கள். அத்தியாவசியமான பொருட்களை வாங்குவீர்கள். பழுதடைந்த பொருட்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள்.

ஞாயிறு -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். வியாபாரம் வளர்ச்சி அடையும். வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மூகாம்பிகை அம்மனை வணங்கி வாருங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
**************************************************

மிருகசீரிடம் -
மனக் குழப்பங்கள் தீரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் குறையும்.
ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல் வந்துபோகும். மனதைரியம் கொள்ளுங்கள். பெரிய பாதிப்புகள் ஏதும் வராது. உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும்.தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தினர் நிலை மற்றும் எதிர்காலம் கருதி அச்சம் தோன்றும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள் -
தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். வியாபாரம் வளர்ச்சி அடையும். தாயாரின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான புதிய ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

செவ்வாய் -
அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியரின் வேலையை செய்ய வேண்டியது வரும்.நீண்டநாள் நண்பர் ஒருவரால் ஆதாயம் உண்டாகும்.

புதன் -
நெருக்கடி தந்த கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வியாபார ஒப்பந்தங்கள் நிறைவேறும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன்-
எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் சரியாக செய்து முடிப்பீர்கள். வியாபார பேச்சுவார்த்தைகளில் தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான முடிவு ஏற்படும்.

வெள்ளி -
தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு உற்சாகத்தைத் தரும்.தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

சனி-
அதிக நன்மைகள் நடைபெறும். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். குழந்தைகளின் கற்றல் திறமையை வளர்க்கும் விதமாக வீட்டிலேயே ஒரு சில வசதிகளை செய்து தருவீர்கள்.

ஞாயிறு -
சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடையும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் -
துர்கை வழிபாடு நன்மைகளைத் தரும். ஸ்ரீ துர்கை கவசம் பாராயணம் செய்வது மனதில் நம்பிக்கை பிறக்கும்.
*************************************************************

திருவாதிரை -
இதுவரை இருந்த மனக் குழப்பங்கள் தீரும்.
அது மட்டுமல்ல அர்த்தமற்ற சிந்தனைகள் தோன்றி உங்களை அச்சுறுத்திக்கொண்டிருந்திருக்கும். இனி எந்தக் கவலையும் பட வேண்டியதில்லை. இனி எந்த பிரச்சினைகளும் வராது. கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் முன்னேற்றமான தகவல்களாகவே இருக்கும்.
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான அனைத்து உதவிகளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
வியாபார பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருக்கும். சொத்துக்கள் விற்பனை சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும். வணிகத்தில் வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.


செவ்வாய்-
பயணங்கள் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். உடலில் அசதி சோர்வு ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். அமைதியாக இருப்பது நல்லது.

புதன் -
எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வியாபார பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்களாக மாறும். தொழில் தொடர்பான முக்கிய சந்திப்புகள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும் கூட்டுத்தொழிலில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஆதாயம் பெருகும்.

வியாழன் -
வங்கியில் எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். நெருக்கடி தந்துகொண்டிருந்த முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். பெண்களுக்கு தந்தைவழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் லாபம் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும்.

வெள்ளி-
எதிர்பார்த்த உதவிகள் மட்டுமல்லாமல் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வியாபார பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் ஏற்படும்.புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்.

சனி-
தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் கருத்துக்கள் சொல்லாமல் இருப்பது நல்லது. செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன் நன்றாக படித்து பார்க்க வேண்டும்.

ஞாயிறு -
இதுவரை வராமலிருந்த பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கிடைக்கும். சகோதரர்கள் சொத்துப் பிரச்சினையில் உங்களுக்கு இணக்கமாக இருப்பார்கள். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீநடராஜரை வழிபாடு செய்யுங்கள். சிவபுராணம் வாசியுங்கள். நன்மைகள் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
******************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x