Published : 05 Apr 2020 12:04 PM
Last Updated : 05 Apr 2020 12:04 PM

 அஸ்வினி, பரணி, கார்த்திகை ; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! (ஏப்ரல் 6 முதல் 12 வரை) 

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்


அஸ்வினி-
மனதில் புதிய நம்பிக்கையும் தைரியமும் பிறக்கும். வேலையில் கூடுதல் பொறுப்புகள் மற்றும் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுவீர்கள். பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக இருக்கும். திருமணத் தேதி் உறுதி்செய்யப்படும். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள். கலைஞர்களுக்கு தேவையான உதவிகள் நண்பர்களால் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
நிதானமாக முடிவெடுங்கள். அலுவலகப் பணியில் கவனமாக இருங்கள். சகோதரர்களிடம் சண்டை சச்சரவுகள் வேண்டாம். குடும்பத்தினர் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். சிறுதூர பயணமாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும்.

செவ்வாய் -
எண்ணங்கள் அனைத்தும் செயல் வடிவமாகும். முயற்சிகள் முழு வெற்றி தரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை நீடிக்கும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக சாதகமான பதில் கிடைக்கும்.

புதன்-
தர்ம சிந்தனை அதிகரிக்கும் தேடிப்போய் பலருக்கும் உதவி செய்வீர்கள் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். நன்மைகள் அதிகமாக நடைபெறும் நாள்.

வியாழன்-
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். அல்லது நண்பர்களிடமிருந்தோ, நிதி நிறுவனங்களிடமிருந்தோ உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.வியாபார வளர்ச்சி சீராக இருக்கும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்தோ அல்லது வெளி இடத்தில் இருந்து வரவேண்டிய பணம் உங்களுக்கு வந்து சேரும்.

வெள்ளி-
எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாளவேண்டும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நிதானத்தை இழக்காமல் இருக்க வேண்டும். அலுவலக வேலைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் தொடர்பான விஷயங்களில் அதிக எச்சரிக்கையும் கூடுதல் கவனமும் தேவை. வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்கள் எதுவும் செய்யவேண்டாம்.

சனி-
தொலைபேசி வழித் தகவல் மனதுக்கு நிறைவைத் தரும். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உங்களுடைய அவசரத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

ஞாயிறு-
அதிக நன்மைகள் நடைபெறும் நாள். உதவிகள் தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் இன்று பேசி முடிவு எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம்-
திருச்செந்தூர் செந்திலாண்டவரை மனதில் நினைத்து வணங்குங்கள். நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
*****************************************************


பரணி -
சுறுசுறுப்பாக பணியாற்றி எடுத்துக்கொண்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். மன நிறைவைத் தரக் கூடிய வாரமாக இருக்கும்.
மனதில் இருந்த அச்ச உணர்வுகள் முழுமையாக விலகும். குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். தொழில் தொடர்பாக தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த மந்த நிலை மாறி வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பெண்கள் தங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். சுபகாரிய விசேஷங்களில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் சூழலும் உள்ளது.

இந்த வாரம் -

திங்கள்-
வரவு தாராளமாக இருக்கும். இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தொழில் தொடர்பாக அரசு உதவிகள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். புதிய யுத்திகளை கையாண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலையிலிருந்த அழுத்தம் குறைந்து மனநிம்மதி ஏற்படும். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணவரவு எதிர்பார்த்த படியே இருக்கும்.

செவ்வாய்-
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிட வேண்டாம். இருவருக்கிடையே ஏற்படும் சண்டைகளில் நீங்கள் சமரசம் செய்யாமல் இருக்கவேண்டும். திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

புதன்-
சொத்து தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய சலுகைகள் இன்று கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். தொழில் தொடர்பாக முன்னேற்றமும், தேவையான உதவிகளும் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான ஒரு சில அத்தியாவசியப் பொருட்களை இன்று வாங்குவீர்கள். சகோதரர்களுடன் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

வியாழன்-
நீங்களே வலியச் சென்று உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவி செய்வீர்கள். மனநிறைவு தரும்படியான காரியங்களை செய்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளுக்கு தேவையானவைகள், கல்வி தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் செய்து தருவீர்கள்.

வெள்ளி-
வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். வங்கிக் கடன் பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்து புதிய கடன் பெறும் வாய்ப்பு உள்ளது. திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களின் திருமணம் தொடர்பான விஷயங்கள் முடிவாகும்.

சனி-
பொறுமை, நிதானம், அவசரப்படாமல் இருப்பது போன்றவை இருக்க வேண்டும். எந்த முடிவுகளையும் உடனுக்குடன் எடுக்க வேண்டாம். நிதானமாக சிந்தித்து அல்லது ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்க வேண்டும். திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மருத்துவச் செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஞாயிறு-
நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று தானாக தேடி வரும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தை தரும். நண்பர்களாலும் உறவினர்களாலும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்துவிடுவீர்கள். அலுவல் விஷயமாக தாமதப்பட்டு கொண்டிருந்த ஒரு சில பிரச்சினைகள் இன்று முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
ஸ்ரீ மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வாருங்கள். விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தவை நடக்கும்.
***************************************************

கார்த்திகை-
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம். ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் விலகும். ஆரோக்கியம் மேம்படும். குழப்பமான மனநிலைகளில் இருந்து இப்போது வெளிவருவீர்கள்.
தொழில் தொடர்பாக நல்ல தகவல்களும் முன்னேற்றமும் உண்டாகும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரும். குடும்பத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
பெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதர வழியில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சீரான வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவும் உண்டு.

இந்த வாரம் -

திங்கள்-
தேவையான உதவிகள் தேடி வரும்.அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை வரும் சலுகைகள் கிடைக்கும் ஒரு குழுவுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பும் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் சீரான வளர்ச்சியில் இருக்கும். நீண்ட நாளாக தொடர்பில் இல்லாத நண்பர் இன்று தொடர்பு கொள்வார்.

செவ்வாய்-
உங்களுக்கு நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளும் நாள். உங்களிடம் இருக்கக்கூடிய நிறைகுறைகளை நீங்களே அலசி ஆராய்வீர்கள். குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிதாக தொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது போன்ற சிந்தனைகள் உருவாகும். அதற்கான முயற்சிகளில் இறங்குவதற்கான தேடுதலைத் தொடங்குவீர்கள்.

புதன்-
தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோகமாக லாபம் ஏற்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் கூடிய நாளாக இருக்கும். நண்பர்களாலும் உறவினர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய விஷயங்கள் பற்றிய தகவல் இன்று கிடைக்கும்.

வியாழன்-
பணிச்சுமை அதிகரிக்கும். வேலையில் நிறைய அழுத்தங்கள் ஏற்படும். பரபரப்பாக இயங்குவீர்கள். குடும்பத்தினர் தொல்லை அதிகரிக்கும் பயணங்களை தவிர்க்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

வெள்ளி-
நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று கைது வந்து சேரும். ஆதாயம் அதிகமாக ஏற்படக்கூடிய நாள். உத்தியோகத்தில் முடிக்காமல் இருந்த வேலைகள் அனைத்தையும் இன்று திறம்பட செய்து முடிப்பீர்கள். தொழில் தொடர்பாக உதவிகளும் தொழில் வளர்ச்சியும் உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபமும் கிடைக்கப்பெறுவார்கள். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகளும் இன்று முழுமையாக விலகும்.


சனி-
தர்ம காரியங்கள் செய்யத் தோன்றும். உங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒரு சில உதவிகளை செய்து தருவீர்கள். குழந்தைகளின் பொறுப்புணர்வைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.

ஞாயிறு-
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அதிக நன்மைகள் நடைபெறும் நாள். குடும்பத்தினர் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
சூரிய பகவானை வணங்குங்கள். ஆதித்யஹிருதயம் கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனதில் நம்பிக்கை பிறக்கும். சிறப்பான வாரமாக இருக்கும்.
**************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x