Published : 01 Mar 2020 11:45 AM
Last Updated : 01 Mar 2020 11:45 AM

இந்த வாரம் இப்படித்தான்! வார  நட்சத்திர பலன்கள் - (மார்ச் 2 முதல் 8ம் தேதி வரை) அஸ்வினி, பரணி, கார்த்திகை - ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

அஸ்வினி -
நன்மைகள் பலவாறாக நடக்கும். ஆனாலும், நிதானம் மிக அவசியம். உடனடியாக முடிவுகளை எடுக்காமல் நிதானமாக ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த நிலை மார்ச் 12 வரை நீடிக்கிறது.


உத்தியோகத்தில் இயல்பான நிலையே தொடரும். ஒருசிலருக்கு இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும்.தொழிலில் வருமானம் எதிர்பார்த்த படியே இருக்கும்.


வியாபார வளர்ச்சி சீராக இருக்கும், கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது, பழைய பாக்கிகளை சற்றுக் கடுமை காட்டி வசூலிக்க நேரிடும். எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். சகோதரர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஒருசிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள் -
வருமானம் தாராளமாக இருக்கும். அதேசமயம் சுபச் செலவுகளும் ஏற்படும். உறவினர்கள் வருகை உண்டு. உறவினர்களுக்கு செலவு செய்ய வேண்டியது வரும். தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. வருமானம் இருமடங்காக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். இல்லத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடப்பதற்கான சூழ்நிலை உள்ளது.

செவ்வாய்-
குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து தருவீர்கள். அலுவலகத்தில் இயல்பான நிலையை இருக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் சற்று தள்ளிப் போகும்..

புதன்-
வேலைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இன்று வேலைக்கான தகவல் உறுதியாகும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். கடன் தொடர்பான விஷயங்கள் இன்று முடிவுக்கு வரும். கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கவனமாக இருந்து சாதகமாக பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். தேவையான உதவிகள் கிடைக்கும்.

வியாழன்.
அலைச்சல்கள் அதிகரிக்கும். செலவுகள் ஏற்படும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுவதில் இழுபறியான நிலை உண்டாகும். வியாபாரிகள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

வெள்ளி-
சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக இருக்கும்.சொந்தமாகத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இன்று வேலைக்கான நல்ல தகவல் கிடைக்கும்.

சனி-
தொழில் தொடர்பாக வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வியாபாரிகளுக்கு புதிய ஏஜென்சிகள் கிடைக்கப் பெறுவார்கள். பெண்களுக்கு ஆபரணம் தொடர்பான கடன் பிரச்சினைகள் தீரும்.

ஞாயிறு-
வியாபாரம் தொடர்பாக புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அதற்கான உதவிகளும் கிடைக்கும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வீடு மாறும் சிந்தனை அல்லது வாகனம் மாற்றும் சிந்தனை ஏற்படும்.

வணங்கவேண்டிய தெய்வம்-
ஸ்ரீ துர்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சூட்டி வணங்குங்கள். செலவுகள் குறையும். வருமானம் அதிகரிக்கும். நினைத்தது நிறைவேறும்.
*****************************************************************

பரணி -
நன்மைகள் நடைபெறும் வாரம். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உறுதியாகும்.


வெளிநாட்டு வேலை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இந்த வாரம் வேலை தொடர்பான தகவல் கிடைக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும்.


புதிய கிளைகள் தொடங்குவது அல்லது புதிதாக வேறு ஒரு வியாபாரம் தொடங்குவது போன்றவை நடக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு சொத்துக்கள் சேரும். தேவையான உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படும்.

இந்த வாரம் -

திங்கள்-
குடும்பத்தில் வீண் சண்டை சச்சரவுகள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையில்லாத பணிச்சுமை ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். பயணங்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது.

செவ்வாய்-
குடும்பத்தில் அமைதி திரும்பும். அத்தியாவசியப் பொருட்களை குடும்பத்தினருக்கு வாங்கித் தருவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சியில் சாதகமான தகவல் கிடைக்கும்.

புதன்-
உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். நண்பர்களிடமும் அலுவலகத்திலும் தேவையற்ற வீண் விவாதங்கள் செய்ய வேண்டாம். வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். பாக்கிகள் வசூல் செய்வதில் நிதானமாக செயல்பட வேண்டும்.

வியாழன்-
சொந்த வீடு வாங்குவது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். தொழில் தொடர்பான விஷயங்கள் மனநிறைவைத் தரும் வகையில் இருக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வெள்ளி -
குலதெய்வ வழிபாடு செய்யும் எண்ணம் தோன்றும்.உங்கள் செயல் மற்றவர்களுக்கு கோபத்தை தரும். அதேசமயம் மற்றவர்கள் செயல்பாடும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். எனவே, எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவு எடுக்க வேண்டும்.

ஞாயிறு-
தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார சந்திப்புகள் லாபகரமாக இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்-
விநாயகர் வழிபாடு செய்யுங்கள். விநாயகர் அகவலை, காலை மாலை இருவேளைகளிலும் பாராயணம் செய்யுங்கள், நன்மைகள் அதிகமாகும்.
**********************************************

கார்த்திகை-
மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம்.


உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் தீரும். உத்யோகத்தில் இயல்பான நிலையே தொடரும். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.


குடும்பத்தினருடன் ஏற்பட்டிருந்த சில சங்கடமான சூழ்நிலைகள் சுமூகமாக மாறும். பெண்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் காண்பார்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் இதுவரை இருந்த மந்த நிலை மாறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும், அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த வாரம் -

திங்கள்-
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் தொடர்பான முக்கியமான பிரச்சினை முடிவுக்கு வரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும்.

செவ்வாய்-
அலுவலகத்திலும், பணி செய்யும் இடத்திலும் பணிச்சுமை அதிகமாக ஏற்படும். அடுத்தவர்கள் வேலையை நீங்கள் செய்ய வேண்டிய நிலை வரும். பயணங்களால் ஆதாயம் குறையும். வியாபார பேச்சுவார்த்தைகள் இழுபறியாக இருக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் மேலும் சில நாட்கள் தள்ளிப் போகும்.

புதன்-
முயற்சிகள் அனைத்தும் சாதகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமுகமாக தீரும். வங்கிக்கடன் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் கணிசமாக இருக்கும்.

வியாழன்-
உறவினர்களாலும் நண்பர்களாலும் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியது வரும். சொத்துக்கள் தொடர்பாக பிடிவாதம் இல்லாமல் இணக்கமாகச் செல்வது நல்லது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேச வேண்டும்.

வெள்ளி-
எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியை தரும். வருமானம் இருமடங்காக இருக்கும். தொழிலில் லாபம் பெருகும். வியாபாரத்தில் அமோகமான வளர்ச்சி உண்டாகும். சேவை சார்ந்த தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

சனி-
நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். அக்கம்பக்கத்தினருடனும், உறவினர்களிடமும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அடுத்தவர் பிரச்சினைகளில் கருத்து கூறாதீர்கள்.

ஞாயிறு-
தேவையான உதவிகள் அனைத்தும் கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பான சந்திப்புகளால் ஆதாயம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும்.

வணங்க வேண்டிய தெய்வம்-
முருகப் பெருமானை வணங்குங்கள். சண்முக கவசம் பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் பெருகும். தேவைகள் பூர்த்தியாகும். மன நிறைவு ஏற்படும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x