Published : 16 Oct 2019 10:55 AM
Last Updated : 16 Oct 2019 10:55 AM

இந்த வார நட்சத்திரப் பலன்கள் (அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை) : விசாகம் முதல் உத்திராடம் வரை


ஜோதிடர் ஜெயம் சரவணன்

விசாகம்
எத்தனை சோதனைகள் வந்தாலும் அசராமல் முயற்சி மேல் முயற்சி செய்து வெற்றி காண்பவர் நீங்கள். இந்த வாரம் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் முழு வெற்றியை அடைவீர்கள். எல்லா கிரகங்களும் உங்கள் நட்சத்திரத்திற்கு சாதகமான நட்சத்திரங்களில் இருப்பதால் நற்பலன்கள் நடக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் தீரும். அமைதி நிலவும். குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

உத்தியோகம் - இதுவரை நல்லவேலை கிடைக்காமல் வருத்தத்தில் இருந்த உங்களுக்கு இந்த வாரம் நல்ல வேலை அமையும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். உங்கள் கருத்து எல்லோராலும் ஏற்கப்பட்டு வரவேற்பு பெறுவீர்கள். பதவி உயர்வுக்கான அனைத்து அம்சங்களும் நிறைவேறும். வெளிநாட்டில் வேலைபார்க்கும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். உணவகங்களில் வேலை பார்ப்பவர்கள், பெயிண்ட் வேலை செய்பவர்கள், விற்பனை பிரதிநிதிகள், கூரியர் வேலை செய்பவர்கள் இவர்களுக்கெல்லாம் சம்பள உயர்வு, வாகன வசதி கிடைக்கும்.

தொழில் - சொந்தத் தொழில் செய்பவர்கள், கூட்டுத்தொழில் செய்பவர்கள், நல்ல லாபத்தைப் பார்ப்பார்கள். தொழிலுக்காக அலைச்சல்கள் உண்டாகும். நீண்டதூரப் பயணங்கள் ஏற்படும். இந்த பயணங்களால் உங்கள் நிறுவனத்திற்கு நிறைய ஒப்பந்தங்கள் ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் இப்போது முயற்சி செய்யலாம். அரசு, வங்கி, நண்பர்கள் என எல்லா வகையிலும் உதவிகள் கிடைக்கும். டிராவல்ஸ் நிறுவனம் நடத்துபவர்கள் பெருநிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

பெண்களுக்கு - குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்போது குழந்தை பாக்கியம் உண்டாகும். சகோதரர்கள் வழியில் இருந்த பிணக்குகள் நீங்கி உறவுகள் சுமூகமாகும். பணியிடத்தில் பதவி மாற்றம் - இடமாற்றம் ஏற்படும். வீட்டிற்கான அலங்காரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். டியூஷன் அல்லது கோச்சிங் சென்டர் சென்று படிப்பீர்கள். நண்பர்களுடன் கூட்டாக கல்வி பற்றிய கலந்துரையாடல் போன்றவை நடக்கும்.

கலைஞர்களுக்கு - வாய்ப்புகள் தேடி அலைந்தது போதும், இனி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும், வருகின்ற வாய்ப்புகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க கூடியதாக இருக்கும், சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பொதுப்பலன் - திருமண ஏற்பாடுகள் நடக்கும். சொந்த வீடு வாங்கும் யோகம் ஏற்படும். வீடு வாங்க கடன் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தினரோடு சுற்றுலா சென்றுவருவீர்கள்.
செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு என நான்கு நாட்களும் உங்களுக்கு யோகத்தை செய்யக் கூடியதாக இருக்கிறது. மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். புதன் மற்றும் வெள்ளி இரண்டு நாட்களும் உங்களுக்கு சாதகமாக இல்லை.

வணங்க வேண்டிய தெய்வம் - நவக்கிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள். கூடுதல் நன்மைகளைப் பெறுவீர்கள்.

*******************************************************************************


அனுஷம்
பொறுமையாக இருந்தால் வெற்றியைச் சுவைக்கலாம் என்பது உங்களுக்குத்தான் பொருந்தும். பதட்டமில்லாமல் காரியங்களைச் செய்வதால் வெற்றி என்பது சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும். நீங்கள். இந்த வாரம் அனேக நற்பலன்களை அடையப் போகிறீர்கள். வாரத் துவக்கத்தில் சஞ்சலமும் சலசலப்பும் இருக்கும். வியாழக்கிழமைக்குப் பிறகு எல்லாம் சாத்தியமாகும். எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் உதவி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

உத்தியோகம் - பணியிடத்தில் புதன்கிழமை வரை எதிர்ப்புகளும் சங்கடங்களும் சஞ்சலங்களும் உண்டாகும். அதன்பிறகு அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து சுமூகமான நிலை உருவாகும். எதிர்பார்த்த பணி இடமாற்றம் இப்பொழுது கிடைக்கும், அதுவும் நீங்கள் விரும்பிய இடத்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. உயரதிகாரிகளின் கோபத்துக்கு ஆளானாலும் அந்த நிலைமையை உங்கள் செயலாலும், பேச்சாலும் சரிகட்டி விடுவீர்கள், அதேசமயம் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருந்தால் பெரிய பாதிப்புகள் வராது. இந்த பலன்கள் அனைத்து துறையினருக்கும் பொருந்தும்.

தொழில் - பொதுவாக தொழில் ஸ்தானம் தொழில் ஸ்தானத்தின் அதிபதி நின்ற நட்சத்திரம் சாதகம் இல்லாமல் இருப்பதால் தொழிலில் நிதானப் போக்கை கடைபிடியுங்கள். உங்கள் நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் தேவையற்ற பிரச்சினைகள் வழக்குகள் வந்து சேரும். மிக முக்கியமாக மற்றவர்களுக்காக உதவி செய்தல் ஜாமீன் கொடுத்தல் பெரும் கடன் வாங்குதல் இதையெல்லாம் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினைகள் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு வரும். அதில் தப்பிப்பதும் அதைக் கடப்பதும் பெரும் போராட்டமாக மாறும். டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள் வாகனங்களை கட்டுப்பாட்டோடு இயக்க வேண்டும். பால், பழரசம், தேனீர் போன்ற கடை.நடத்துபவர்கள்.... நீங்கள் விநியோகிக்கும் பொருட்களில் கவனமாக இருங்கள்.

பெண்களுக்கு - எங்கும் எதிலும் எச்சரிக்கை உணர்வோடு இருங்கள். உங்கள் கவனத்தை திசைதிருப்பி விலை உயர்ந்த பொருட்களை பறி கொடுக்க நேரலாம். "ஆசைகாட்டி மோசம் செய்தல் " என்ற கருத்துக்கு நீங்கள் ஆளாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கவனத்தை திசை திருப்பி பெரிய பொருளை அபகரிப்பார்கள்.

மாணவர்களுக்கு - ஞாபகமறதி என்னும் பெரிய பிரச்சினை உங்களை வாட்டும் ,தியானம் செய்தல், ஆலயங்களுக்கு செல்லுதல், மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.

கலைஞர்களுக்கு - பெரிய பாதிப்புகளும் இல்லை. அதேசமயம் முன்னேற்றமும் இல்லை. சமநிலையில் இந்த வாரம் இருக்கும். ஒரு சில உதவிகள் கிடைக்கும். பெரிய அளவிலான உதவிகள் கிடைக்காது.

பொதுப்பலன் - யாருக்கும் வாக்கு கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்துப் போடுவதோ கூடாது. உங்கள் வாக்கு தவறும். சூழ்நிலை உங்களை கட்டிப்போடும், தேவையற்ற வம்பு வழக்குகள் வந்து சேரும். எனவே கவனமாக இருங்கள். வியாழன், வெள்ளி, ஞாயிறு இந்த மூன்று நாட்கள் மட்டுமே உங்களுக்கு சாதகமாக இருக்கும் இதை தவிர்த்து மற்ற நாட்கள் உங்களுக்கு எந்த வகையிலும் உதவாது, எனவே கவனமாக இருங்கள், எச்சரிக்கை உணர்வோடு இருங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள், அனுமன்சாலீசா காலை மாலை என இரு வேளையும் கேளுங்கள். பாராயணம் செய்யுங்கள். மன தைரியம் உண்டாகும், எதிரிகள் காணாமல் போவார்கள், எதிர்ப்புகள் அகலும்.

**************************************************


கேட்டை
கற்பனையிலேயே வாழ்ந்தாலும் அதையெல்லாம் ஒருநாள் நனவாக மாற்றுவீர்கள்.இந்த வாரம் பெரிய ஏற்றமும் இல்லை இறக்கமும் இல்லை.

உத்தியோகம் - நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை, மாறாக மற்றவருக்கு உதவுகிறேன் பேர்வழி என வலியச் சென்று உதவட் சென்றீர்களேயானால் வீண் பிரச்சினைகள் உங்களுக்கு வந்து சேரும். சக நண்பர்களே எதிரியாக மாறுவார்கள். எதிர்ப்புகளை வெளிப்படையாக காட்டுவார்கள் , நீங்கள் எதைப் பேசினாலும் அதில் குற்றம் கண்டு பிடிப்பார்கள், எனவே பேச்சைக் குறைக்க வேண்டும். எதிலும் தலையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். பணிபுரியும் இடத்தில் வேலை அதிகமாகும், அதனால் ஆரோக்கியம் பாதிப்பு ஆகும் எனவே நிதானம், பொறுமை அதிகமாக தேவை.

தொழில் - செய்கின்ற தொழிலை சரியாக கவனித்துக் கொண்டால் பெரிய பிரச்சினைகள் ஏதும் வராது. கடன் வாங்க வேண்டாம். இருக்கின்ற கடனை அடைக்கும் வழியைப் பாருங்கள். செய்கின்ற தொழில் மந்தமாக இருக்கின்றதே என்று மாற்று தொழில் செய்யலாமா என்ற யோசனையை கைவிடுங்கள், . அது வேறொரு பிரச்சினைக்கு கொண்டு செல்லும். எனவே இருக்கின்ற தொழிலை சரியாக செய்தாலே பெரிய பிரச்சினைகள் ஏதும் வராது.

பெண்களுக்கு - அக்கம்பக்கத்தினரோடு ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்துங்கள். மனதில் தேவையற்ற குழப்பங்கள் உருவாகும், மனம் ஆற்றாமையால் பொங்கும். எனவே இது ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆகவே மனதை ஒருநிலை படுத்துங்கள், தியானம் செய்தல், மந்திரங்கள் உச்சாடனம் செய்தல் மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.

மாணவர்களுக்கு - கூடாநட்பு கேடாய் முடியும் என்பது பழமொழி. எனவே தேவையற்ற நட்புகளை புறந்தள்ளுங்கள். கல்வியில் முழுமையாக கவனம் செலுத்துங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு - வீண் அலைச்சலை குறைத்துக்கொள்ளுங்கள். வெறுமனே அலைவதால் எந்தப்பயனும் இல்லை என்பதை உணருங்கள். உங்களுக்கான காலம் காத்துக்கொண்டிருக்கிறது, எனவே நிதானமாக இருந்தால் நிறைய சாதிக்கலாம் என்பதை உணருங்கள்.

பொதுப்பலன் - அக்கம்பக்கத்தினரோடு சமாதானமாகச் செல்லுங்கள். கூட்டமாக இருக்கும் இடத்தில் இருந்து விலகி இருங்கள். இல்லையென்றால் தேவையற்ற பிரச்சினைகள் வந்து சேரும். இந்த வாரம் வியாழக்கிழமை வரை சாதகமாக இருக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிறு இந்த மூன்று நாட்கள் சாதகங்களும் பாதகங்களும் கலந்து நடக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் - சப்த கன்னிமார்கள் உள்ள ஆலயத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள். நாகர் சிலைக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யுங்கள்.

****************************************************************************************************


மூலம்
இறை நம்பிக்கை நிறைய இருக்கிறது. தெய்வம் நிச்சயம் கைவிடாது என்ற நம்பிக்கை உடையவர்கள் நீங்கள். இந்த வாரம் மனக்குழப்பம் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி சாதிப்பீர்கள். திருமணம் நிச்சயிக்கப்படும். வேலை கிடைக்கும். அயல் நாடு செல்லும் முயற்சி வெற்றியடையும். சோம்பல் அதிகமாகும். மறதி அதிகமாகும்.

உத்தியோகம் - வேலைப் பளு அதிகரிக்கும். அதன் காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கும். ஒரு வேலையை உடனே முடிக்க முடியாமல் திணறுவீர்கள். ஒவ்வொரு முறையும் ஏதாவது தவறு நடந்து கொண்டே இருக்கும். காரணம் மன அழுத்தத்தால் ஏற்படும் கவனக்குறைவே காரணம். இது எல்லா துறை வேலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். உயரமான இடங்களில் பணிபுரிபவர்கள் கவனமாக இருக்க வேண்டும், குறிப்பாக ஏணிகளில் ஏறி வேலை செய்வது மாதிரியான வேலை செய்பவர்களுக்கு மிக கவனமும் எச்சரிக்கை உணர்வும் தேவை.

தொழில் - பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. அதே சமயம் பெரிய வளர்ச்சியும் இல்லை. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் வீண் சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். கமிஷன் மண்டி, தரகுத் தொழில் செய்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால் வரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.விற்பனைப் பிரதிநிதிகள் அலைச்சலும் அலைச்சலுக்கேற்ற ஆதாயமும் பெறுவீர்கள். உதிரி பாகங்கள் விற்பனை நிலையம் நடத்துபவர்கள் லாபம் அதிகம் பார்ப்பார்கள். நிலக்கரி தொழில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் . பெட்ரோலிய பொருள் விற்பனை செய்பவர்கள் எண்ணெய் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.

பெண்களுக்கு - உடன் பிறந்தோர்களிடம் வீண் விவாதங்கள் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம், அது உறவுகளை பிரிக்கும் அளவுக்கு சென்று விடும். விளையாட்டாக பேசுவது வினையில் முடிந்துவிடும். எனவே கவனமாக இருங்கள்.

மாணவர்களுக்கு - சோம்பலை விடுங்கள் சுறுசுறுப்பாக மாறுங்கள். மாலை வேளைகளில் கோயிலுக்குச் செல்லுங்கள். படிப்பில் தானாக கவனம் வரும்.

கலைஞர்களுக்கு - பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை தந்து கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்படலாம். இருந்தாலும். மனம் தளராதீர்கள். விரைவில் வாய்ப்புகள் கிடைக்கும்.

பொதுப் பலன் - சோம்பலும் விரக்தியும் உண்டாகும். வேண்டாத சிந்தனைகள் தோன்றும். தனிமையில் இருப்பதை தவிருங்கள். நண்பர்களோடோ கூட்டத்தோடோ இருக்கப் பாருங்கள். செவ்வாய் வியாழன் சனி ஞாயிறு ஆகிய நாட்கள் சாதகமாக இருக்கும். பணத் தேவைகள் பூர்த்தியாகும். உதவிகள் கிடைக்கும். வெள்ளிக்கிழமை மட்டும் சற்று பாதகத்தை செய்யும்.அதேசமயம், புதன்கிழமை பயணங்கள் தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்கள் போடுவது பேச்சுவார்த்தை நடத்துவது தவிர்க்க வேண்டும்.

வணங்க வேண்டிய தெய்வம் - சரபேஸ்வரரை வணங்குங்கள். மனம் அமைதி பெறும்.

*******************************************************************************************


பூராடம்
தத்தித் தாவுது மனசு எனும் வார்த்தை, உங்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். "இதைவிட அது சிறப்பு, அதை விட இது சிறப்பு " என எது சிறப்பானதோ அதை தேடிக் கொண்டே இருப்பீர்கள். சிறந்ததை கண்டும் கொள்வீர்கள். இந்த வாரம் உங்களுக்கு நன்மைகள் அதிக அளவில் கிடைக்கும். முகம் தெரியாத நபர் கூட உங்களுக்கு உதவுவார். நாலாபக்கமும் உதவிகள் வந்து சேரும்.

உத்தியோகம் - பணியில் இருந்த மன இறுக்கம் படிப்படியாக அகலும். சகஜ நிலைக்கு மெதுவாக மாறுவீர்கள். ஆனாலும் சோம்பல் மட்டும் விலகாது. உங்களை மதிக்காத சக பணியாளர்கள் கூட இப்போது மதிப்போடு பழகுவார். இடமாற்றம் ஏற்படும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் எண்ணம் உண்டாகும். ஆசிரியர்கள் மற்றும் வங்கி இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, அரசு கெளரவம் பெறுவார்கள்.

தொழில் - நல்ல வளர்ச்சி உண்டு. ஆனால் தவறான முடிவுகள் தடையாக இருக்கும். எனவே நன்கு ஆலோசித்து மற்றவர்களின் கருத்துக்களை கேட்ட பின் முடிவெடுத்தால் தொழில் வளர்ச்சி அடையும். வீட்டு உபயோக பொருள் தயாரிப்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். நூல் வியாபாரிகள் துணி வியாபாரிகள் லாபம் அதிகம் பெறுவார்கள்.

பெண்களுக்கு - ஆரோக்கியம் அவ்வப்போது படுத்தும். ஆனாலும் கவலை வேண்டாம். தலை முடி கொட்டும் பிரச்சினை அதிகமாக இருக்கும். காரணம் மன அழுத்தம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே மன இறுக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள். எல்லாம் சரியாகும்.

மாணவர்களுக்கு - அலட்சிய குணத்தை மாற்றுங்கள். பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடுவது தேர்வு நேரத்தில் பாதிப்பை உண்டு பண்ணும்.

கலைஞர்களுக்கு - எந்த வாய்ப்பும் எளிதல்ல. எனவே எந்த வாய்ப்பையும் அலட்சியப்படுத்தாதீர்கள். இப்போது நல்ல வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பொதுப் பலன் - சோம்பலும், அலட்சியமும் விடுத்தால் நிறைய சாதிக்கலாம். திருமணம் உறுதியாகும், குழந்தை பாக்யம் கிடைக்கும். கணவன் மனைவி பிணக்குகள் சரியாகும் செவ்வாய், புதன் வெள்ளி ஞாயிறு இந்த நான்கு நாட்களும் நல்ல பலன்களும், பண வரவும், மனம் மகிழும் சம்பவங்களும் நடக்கும். வியாழன் மற்றும் சனி ஆகிய நாட்கள் எதிர்மறை விஷயங்களை உண்டு பண்ணும்.

வணங்க வேண்டிய தெய்வம் - நவக்கிரகத்தில் உள்ள சனி பகவான் மற்றும் கேது பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுங்கள் தடைகள் விலகும். காரியம் வீரியமாகும். வெற்றி நிச்சயம்.

*************************************************************************************************

உத்திராடம் -
நிதானமாக சிந்தித்து காரியங்களில் வெற்றி பெறுபவர் நீங்கள். எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். எது நடந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்வீர்கள். இந்த வாரம் எதிர்பாராத வாய்ப்புகள் தானாக கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களும் திட்டமிடாத காரியங்களும் வெற்றியைத் தரும்.

உத்தியோகம் - பணி இடத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறி சகஜ நிலைக்கு வருவீர்கள். உங்கள் மீதிருந்த அவப்பெயர் நீங்கும். உங்கள் மீதான விசாரணை உங்களுக்கு சாதகமாகும். பதவி மாற்றம் ஏற்படும். கன்சல்டன்ட் என்னும் ஆலோசகர் வேலை ஒரு சிலருக்கு கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனத்தின் இந்திய கிளைக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ரயில்வே மற்றும் மத்திய அரசுப் பணி கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

தொழில் - வளர்ச்சிப் பாதையில் செல்வீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அல்லது சமாதானமாகப் போகும். போட்டி நிறுவனங்கள் பின் வாங்கும். உங்கள் நிறுவனத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடையும். சிறு நிறுவனங்கள் நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு செல்லும். கால்நடை வளர்ப்புத் தொழில் அபிவிருத்தி அடையும். விவசாய இயந்திரங்கள் தொழில் வளர்ச்சி ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் நிறைய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவார்கள்.

பெண்களுக்கு - மன மகிழ்ச்சி அடையும் வகையில் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயமாகுதல், வேலை கிடைத்தல் போன்ற இனிய சம்பங்கள் நடக்கும். சொத்து சேர்க்கை உண்டு.

மாணவர்களுக்கு - பழைய தேர்வுகளை இப்போது எழுதி தேர்ச்சி அடைவீர்கள், அயல் நாட்டில் கல்வி பயிலும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு - இவ்வளவு நாள் போராடியதற்கு இப்போது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு பல வழிகளிலும் கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர் இப்போது காணமல் போவார்.

பொதுப் பலன் - அதிர்ஷ்டமோ வாய்ப்போ மிக அரிதாகத்தான் கிடைக்கும். இப்போது அப்படியான அரிய வாய்ப்பு கிடைக்கும் நேரம். சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம். எனவே வாய்ப்பை நழுவவிடாதீர்கள். செவ்வாய், புதன், வியாழன், சனி ஆகிய நாட்கள் அற்புதப் பலன் தரும் நாட்கள். சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெள்ளி மற்றும் ஞாயிறு எதிர்மறை விஷயங்களை உண்டு பண்ணும். எனவே தவிர்த்துவிடுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் - துர்கை மற்றும் காளி வழிபாடு நன்மைகள் தரும். எதிரிகள் விலகுவார்கள். செல்வம் பெருகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x