Published : 13 Sep 2019 12:31 PM
Last Updated : 13 Sep 2019 12:31 PM

புரட்டாசி மாத நட்சத்திரப் பலன்கள் :  பூரம் முதல் சுவாதி நட்சத்திரம் வரை :  (செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17ம் தேதி வரை) 


ஜோதிடர் ஜெயம் சரவணன்

பூரம் நட்சத்திரம்-


உங்கள் பிரச்சினைகளும் கவலைகளும் தீரும் மாதம் இது.


ஏதாவதொரு வகையில் உங்கள் பணப்பிரச்சினைகள் தீர, வழிவகைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். அரசாங்க உதவி, வங்கிக் கடன் கிடைக்கும். வர வேண்டிய பாக்கிகள் இப்போது வசூலாகும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.


புதிய முடிவு ஒன்றை எடுத்து அதை செயலாக்கிக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். சக ஊழியர்களின் மறைமுக எதிர்ப்பு தொடரும். தொழிலில் இருந்த மந்த நிலை படிப்படியாக விலகும்.கடும் முயற்சிக்கு பின் பாக்கிகள் வசூலாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள் சம்பந்தமான பிரச்சினை முடிவுக்கு வந்து ஆறுதலைத் தரும்.புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

பெண்களுக்கு - குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் நேரம் வந்துவிட்டது. ஆபரணங்கள், உடைகள், வீட்டுக்குத் அத்தியாவசிமான பொருள் வாங்குவது என பரபரப்பாக இருப்பீர்கள். பணியிடத்தில் எல்லோருடைய ஆதரவும் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் உடையவர்கள் அதற்கான முயற்சிகளில் இறங்கலாம்.

மாணவர்களுக்கு - கல்வியில் அதீத ஆர்வம் ஏற்படும். முடிக்காமல் இருந்த தேர்வுகளை இப்போது முடித்துக்காட்டுவீர்கள். புதிய கல்வி கற்கும் ஆர்வமும் அதற்கான முனைப்பும் காட்டுவீர்கள்.

கலைஞர்களுக்கு - வங்கிக்கடன் உதவியுடன் பயிற்சி மையம் ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது. அசையா சொத்துகள் வாங்குவீர்கள். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரும்.

பொதுப்பலன் - சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பிறப்புறுப்பில் அதன் பாதிப்புகள் வெளிப்படும். ஒருசிலருக்கு ரத்த அழுத்த பாதிப்பு அதிகரிக்கும்.

வணங்கவேண்டிய தெய்வம் - காளியம்மன் மற்றும் துர்கையம்மன் வழிபாடு பல நன்மைகளைத் தரும். ஆரோக்கிய மேம்பாடும் மன நிம்மதியும் தரும்.

சந்திராஷ்டம தினம்- புரட்டாசி-25 (செப்டம்பர் 12)

************************************************


உத்திரம் நட்சத்திரம்-


உன்னதமான நற்பலன்கள் நடைபெறும் மாதம் இது.


தலைமைப் பதவி, உயர் பதவிகள் தேடிவரும் மாதம் இது. அதுவும் புரட்டாசி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள்ளாகவே நடக்கும். தெய்வ நம்பிக்கையும் அதுதொடர்பான ஆன்மிகப் பயணங்களும் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவு, அலுவலக கருத்தரங்கில் உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும்.


ஆடம்பரச் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்து கொண்டே சொந்தத் தொழில் தொடங்கும் சிந்தனை ஏற்படும். சொந்தத் தொழில் செய்வோர் வளரச்சிப்பாதையில் பயணிப்பார்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரம் நல்ல வளர்ச்சி அடையும். கமிஷன் தொழில் சூடு பிடிக்கும்.

பெண்களுக்கு- நல்ல தகவல் வந்து மனம் மகிழ்வீர்கள். திருமணம் நிச்சயம் ஆகும். புத்திர பாக்கியம் உண்டாகும். வேலையில் பதவி உயர்வு உண்டு.

மாணவர்களுக்கு- ஆச்சரியமான விஷயங்கள் நடக்கும். விரும்பிய கல்வியில் சேருதல் அல்லது விரும்பிய கல்விக்கு மாறுதல் நடைபெறும்.

கலைஞர்களுக்கு- உற்ற நண்பரின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழி ஆதரவு கிடைக்கும். ஒருசிலர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

பொதுப்பலன்- தலைவலி,பின்கழுத்தில் வலி, ஒருசிலருக்கு மூலம் முதலான பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

வணங்க வேண்டிய தெய்வம்- ஶ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாடு, பைரவர் வழிபாடு கூடுதல் நன்மை உண்டாக்கும்.

சந்திராஷ்டம தினம்- புரட்டாசி - 26 (செப்டம்பர் - 13)

************************************************************


அஸ்தம் நட்சத்திரம் -


எதிலும் நிதானத்துடன் செயல்படும் மாதம் இது.


அவசர முடிவுகளை தள்ளிப் போடுங்கள். வீடு ரிப்பேர் செலவுகள் உண்டாகும். வாகனச் செலவும் ஏற்படும். அதுவும் எதிர்பாராத நேரத்தில். மருத்துவச் செலவுகளும் உண்டு. ஆனால் பெரிய செலவுகள் இருக்காது.


உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். அல்லது ஊர் மாற்றமே ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பணப்புழக்கத்திற்கு குறைவு வராது. செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத தன வரவு ஆச்சரியப்படுத்தும்.


தொழிலில் நிதானமான போக்கைக் கடைபிடியுங்கள். ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் போது ஒரு முறைக்கு பல முறை படித்துப் பார்த்து கையெழுத்திடுங்கள்., நீண்டகாலமாக இருந்த விற்காத சொத்து, இப்போது விற்பதற்கான வாய்ப்பு உண்டு. செலவுகள் கடன்கள் போக மீதிப் பணத்தில் மனை வாங்கும் வாய்ப்பு உண்டு. திருமணம் நிச்சயம் ஆகும். மறுமணம் செய்யும் சூழல் உள்ளவர்களுக்கு இப்போது மறுமணம் உறுதியாகும்.


பெண்களுக்கு - தங்கம் விலை காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். ஆபரனங்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் பி.எஃப் லோன் வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினை மாற்று மருத்துவத்தால் குணமாகும்.

மாணவர்களுக்கு - மனம் மகிழும்படியான மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஏற்கெனவே முடிக்காத பாடங்களை, இப்போது தேர்வெழுதி முடிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு - நல்ல நல்ல வாய்ப்புகள் வரும். நீண்ட நாள் பிரச்சினை மத்தியஸ்தர் ஒருவரால் பேசித் தீர்க்கப்படும்.

பொதுப் பலன் - நரம்பு மற்றும் தோல் பிரச்சினைகள் வரலாம். கால் பாதம், முழங்கால் இவற்றில் சுளுக்கு முதலான பிரச்சினை உண்டாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் - பைரவர் வழிபாடு, ஸ்ரீ வராகி வழிபாடு மிகவும் அவசியம். செலவுகள் கட்டுக்குள் வரும். ஆரோக்கியம் மேம்படும்.

சந்திராஷ்டம தினம் - புரட்டாசி - 27 (செப்டம்பர் - 14)

**************************************************************************


சித்திரை நட்சத்திரம் -


பதறாமல் நிதானத்துடன் செயலாற்றும் மாதம் இது.


ஒரு பிரச்சினையை எப்படி முடிப்பது எனத் தெரியாமல் தவிக்க நேரிடும். மன உளைச்சல் ஏற்பட்டு நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். ஆனால் இவையனைத்தும் மாதத்தின் முதல் 10 நாட்கள் மட்டுமே! பிறகு தெளிவும் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.
எந்த பிரச்சினைக்காக பயந்தீர்களோ அந்த பிரச்சினை ஒன்றும் இல்லாமல் புஸ்வாணம் ஆகும்.

உயரதிகாரியின் கோபம் தணியும். தொழிலில் எதிர்பாராத புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். ஊழியர்களிடம் கடுமை காட்டாதீர்கள். திருமண வாய்ப்புகள் நிச்சயதார்த்தம், திருமணத் தேதி என அடுத்தடுத்து நிகழும். .

பெண்களுக்கு - பதட்டம் அடையாதீர்கள், பதறின காரியம் சிதறும் என்பதை உணருங்கள். தேவையில்லாத பதட்டம் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பதைப் புரிந்து செயல்படுங்கள்.

மாணவர்களுக்கு - சிறப்பான மாதம். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஞாபகசக்தி அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு - பழைய பாக்கிகள் திடீரென வரும். பிரபலமான நபர் அல்லது அரசு சம்பந்தபட்ட நபர் பரிந்துரையின் பேரில் நல்ல ஒப்பந்தம் ஏற்படும்.

பொதுப் பலன் - மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.அசிடிட்டி போன்ற வயிற்றுப் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது.

வணங்க வேண்டியதெய்வம் - சாமுண்டீஸ்வரி அன்னையை வணங்குங்கள். எதிர்ப்புகள் அகலும். தைரியம் பிறக்கும்.

சந்திராஷ்டம தினம் - புரட்டாசி - 28 (செப்டம்பர் - 15)

********************************************************************************

சுவாதி நட்சத்திரம் -


எல்லா செயல்களிலும் லாபம் கொழிக்கும் மாதம் இது.


இந்த மாதத்தின் துவக்கத்தில் அதாவது முதல் 12 நாட்கள் நீங்கள் செய்யும் காரியங்கள் யாவும் மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுமே தவிர, உங்களுக்கு கால்காசு கூட லாபம் இருக்காது. ஆனால் 12 நாட்களுக்கு பிறகு வட்டியும் முதலுமாக லாபம் வந்து சேரும். ஓய்வில்லாத உழைப்பு நன்மைகளை அதிகம் ஏற்படுத்தித் தரும். சுபவிரயங்கள் ஏற்படும்.


நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு இப்போது திருமணம் உறுதியாகும். திருமணம் ஆனவராக இருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் உறுதியாகும். அல்லது உங்கள் குழந்தைகளுக்கு காது குத்துதல், உபநயனம் போன்ற சுப விசேஷங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் நிம்மதியான போக்கு இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். வழக்குகள் தள்ளிப்போகும்.

பெண்களுக்கு - மன நிம்மதி உண்டாகும். உங்கள் சகோதர வழியில் இருப்பவர்களுக்கு நீங்களாக முன் வந்து உதவுவீர்கள். குழந்தைகளுக்கு அவர்களின் எதிர்காலம் கருதி சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள்.

மாணவர்களுக்கு - கல்வியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கல்விக்கடன் கிடைக்கும். அயல்மொழி நண்பர் அறிமுகம் ஆவார்.

கலைஞர்களுக்கு - அற்புதமான நேரம்.பேச்சுவார்த்தையில் இருந்த விஷயங்கள் இப்போது செயல்வடிவமாக மாறும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். அயலார் ஒருவரால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பொதுப் பலன் - அல்சர் மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சினைகள் வரலாம். தொண்டையில் தொற்று உண்டாகலாம். கீரை வகைகள் உண்ணும் போது உங்களுக்கு ஒத்துவருமா என யோசித்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

வணங்க வேண்டிய தெய்வம் - பிள்ளையார்பட்டி விநாயகர் அல்லது வீட்டுக்கு அருகில் உள்ள விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி வணங்குங்கள்.

சந்திராஷ்டம தினம் - புரட்டாசி - 29 (செப்டம்பர் -16)

*****************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x