Published : 18 Jul 2019 08:15 AM
Last Updated : 18 Jul 2019 08:15 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பணவரவு உண்டு.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். பணம் கையில் தாராளமாகப் புழங்கும். திடீர் பயணம் உண்டு.

மிதுனம்: சிலரின் விமர்சனத்துக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவது நல்லது. அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம்.

கடகம்: பழைய இனிய சம்பவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவு எடுப்பீர்கள்.

சிம்மம்: பங்கு வர்த்தகம் மூலம் பணம் வரும். பழைய கடனை பைசல் செய்ய ஒருபுறம் யோசித்தாலும், மற்றொருபுறம் சொத்து வாங்க புது கடன் வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவார்கள்.

கன்னி: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கலைப் பொருட்கள் சேரும்.

துலாம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்கசமயத்தில் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணப்பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். திடீர் பயணம் உண்டு.

தனுசு: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்பொழுது பாராட்டப்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மகரம்: பல்வேறு தடைகளுக்குப் பிறகே வேலைகள் முடியும். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலைதூக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள்.

கும்பம்: தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும்.

மீனம்: சிந்தனைத்திறன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x