ஹம்ஸானந்தியில் பிரகாசித்த சஞ்சய் சுப்பிரமணியன் | சென்னை இசை அரங்கம்

ஹம்ஸானந்தியில் பிரகாசித்த சஞ்சய் சுப்பிரமணியன் | சென்னை இசை அரங்கம்
Updated on
2 min read

சென்னை: மியூசிக் அகாடமி ஒவ்​வோர் ஆண்​டும் இசை​விழாவை கோலாகல​மாக நடத்தி வரு​கிறது. அடுத்த ஆண்டு நடை​பெற உள்ள நூற்​றாண்டு விழா கொண்​டாட்ட ஏற்​பாடு​களுக்கு நடு​வே, சென்னை மியூசிக் அகாட​மி​யின் 99-வது இசைவிழா தற்​போது விமரிசை​யாக நடை​பெற்று வரு​கிறது.

இதில் வித்​வான் சஞ்​சய் சுப்​பிரமணி​யனின் கச்​சேரி நடை​பெற்​றது. அவருக்கு பக்​கபல​மாக எஸ்​.வரத​ராஜன் (வயலின்), நெய்​வேலி பி.வெங்​கடேஷ் (மிருதங்​கம்), வி.அனிருத் ஆத்​ரேயா (கஞ்​சி​ரா) இருந்​தனர்.

‘சலமு ஜேஸி​தி’ எனத் தொடங்​கும் பந்​து​வ​ராளி ராகத்​தில் அமைந்த தஞ்சை பொன்​னையா பிள்ளை வர்​ணத்​துடன் கச்​சேரியைத் தொடங்​கி​னார் சஞ்​சய். அடுத்​த​தாக, கம்​பீர நாட்டை ராகத்​தில் அமைந்த கோபால​கிருஷ்ண பார​தி​யின் பாடலை (ஹர ஹர சிவசங்​கர) பாடி​னார். அதே தொடக்க வரிக்கு ஸ்வரக் கோர்​வை​களைப் பாடியதும் கச்​சேரி களை​கட்​டியது.

பின்​னர், தேவ​காந்​தாரி ராகத்​தில் சிறிய ஆலாபனை செய்​து​விட்​டு, கோடீஸ்வர ஐயரின் ‘முத்​து​சாமி தீட்​சிதா சத்​குரோ அருள் தந்​தருள்’ எனத் தொடங்​கும் பாடலைப் பாடி​னார். அடுத்​த​தாக ஸ்வா​தித் திரு​நாள் மகா​ராஜா​வின் சுத்த தன்​யாசி (உதய ரவிச்​சந்​திரி​கா) ராகத்​தில் அமைந்த ‘சாமோதம் சிந்​த​யாமி’ எனத் தொடங்​கும் பாடலைப் பாடி​னார்.

இந்த பாடலில், ஸ்ரீமன் நாராயணன் சந்​திரன் போன்று ஒளிவீசும் முகம் கொண்​ட​வ​ராக​வும், முரன், நரகாசுரன் உள்​ளிட்ட அசுரர்​களை அழித்​தவ​ராக​வும், அனை​வருக்​கும் பல வரங்​களை அருள்​பவ​ராக​வும் போற்​றப்​படு​கிறார்.

கச்​சேரி​யில், பிர​தான ராக​மாக சங்​க​ராபரணம் அமைந்​தது. விஸ்​தா​ர​மான ஆலாபனைக்​குப் பிறகு, சுப்​ப​ராம தீட்​சிதரின், ‘சங்​க​ராச்​சார்​யம் ஸ்ம​ராம்​யஹம்” எனத் தொடங்​கும் க்ரு​தி​யைப் பாடி​னார் சஞ்​சய். ‘பரம ஞான லதா’ என்ற வரி​யில் நிர​வல் செய்​து, ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார்.

இந்த க்ரு​தி​யில் ஆதிசங்​கரரின் அருளிச் செயல்​கள் விளக்​கப்​படு​கின்​றன. அத்​வைதக் கொள்​கைகளை மக்​களிடம் கொண்டு சேர்த்​தவ​ராக​வும், அனை​வருக்​கும் தெளி​வான விளக்​கத்தை அளித்​தவ​ராக​வும், அனைத்து முனிவர்​களால் வணங்​கப்​படு​பவ​ராக​வும் ஆதிசங்​கரர் போற்​றப்​படு​கிறார்.

தனி ஆவர்த்​தனத்​தில் வெங்​கடேஷ், அனிருத் ஆத்​ரேயா ஆகியோர் தங்​கள் மிருது​வான வாசிப்​பாலும், கச்​சித​மான கோர்​வை​களாலும் ரசிகர்​களை ஈர்த்​தனர். ராகம் தானம் பல்​லவிக்கு ஹம்​ஸானந்தி ராகத்தை தேர்ந்​தெடுத்​தார் சஞ்​சய். ‘எந்​நேர​மும் உன் சந்​நி​தி​யில் இருக்க வேண்​டும் அய்​யா’ என்ற பல்​ல​வியை த்ரி​காலத்​தி​லும் பாடி ஸ்வரக் கோர்​வை​களைப் பாடி​னார்.

ராக​மாலிகை​யில் ராஜலஹரி, காபி ராக ஸ்வரங்​கள் அமைந்​தன. தொடக்​கம் முதலே பாடகரை வயலினில் நிழல்​போல தொடர்ந்து வந்த வரத​ ராஜன், சங்​க​ராபரண ஆலாபனை​யிலும் ராகம் தானம் பல்​ல​வி​யிலும் முத்​திரை பதித்​தார்.

சுப்​பிரமணிய பார​தி​யாரின் பாகேஸ்ரீ ராகப் பாடல் (நின்​னையே ரதி​யென்​று), புரந்​தர​தாசரின் நாம​நா​ராயணி ராக தேவர்​நாமா (ரங்க பாரோ), பாப​நாசம் சிவனின் மத்​ய​மாவதி ராகப் பாடல் (கற்​பகமே கண் பாராய்) ஆகிய​வற்​றைப் பாடி கச்​சேரியை நிறைவு செய்​தார் சஞ்​சய்.

சிறு​வய​தில் வித்​வான் வி.லட்​சுமி​நா​ராயணனிடம் வயலின் வாசிக்க கற்​றுக்​கொண்ட சஞ்​சய், பின்​னர் தனது அத்தை சுகன்யா சுவாமி​நாதன், விதூஷி ருக்​மிணி ராஜகோ​பாலன், வித்​வான்​கள் கொல்​கத்தா கே.எஸ்​. கிருஷ்ண​மூர்த்​தி, செம்​ப​னார்​கோ​வில் எஸ்​ஆர்​டி.​வைத்​தி​ய​நாதன் ஆகியோரிடம் இசை பயின்​றார். தற்​போது இந்​தியா மட்​டுமின்றி வெளி​நாடு​களி​லும் கச்​சேரி செய்து வருகிறார்.

ஹம்ஸானந்தியில் பிரகாசித்த சஞ்சய் சுப்பிரமணியன் | சென்னை இசை அரங்கம்
அபூர்வ ராகங்களில் பாடி வியக்க வைத்த சௌமியா | சென்னை இசை அரங்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in