வலையப்பட்டி காஷ்யப் நாதாலயாவின் 31-வது இசை விழாவில் கலைஞர்களுக்கு விருதுகள்

வலையப்பட்டி காஷ்யப் நாதாலயாவின் 31-வது இசைவிழாவில் விருது பெற்ற கலைஞர்களுடன் தமிழக கலை, பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.வளர்மதி, கர்னாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம், வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமண்யம், வலையப்பட்டி நாதாலயா அமைப்பின் தலைவர் ஏ.வெங்கட்ரமணி, செயலர் எஸ்.மலர்வண்ணன்.

வலையப்பட்டி காஷ்யப் நாதாலயாவின் 31-வது இசைவிழாவில் விருது பெற்ற கலைஞர்களுடன் தமிழக கலை, பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.வளர்மதி, கர்னாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம், வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமண்யம், வலையப்பட்டி நாதாலயா அமைப்பின் தலைவர் ஏ.வெங்கட்ரமணி, செயலர் எஸ்.மலர்வண்ணன்.

Updated on
1 min read

சென்னை: வலை​யப்​பட்டி காஷ்யப் நாதால​யா​வின் 31-வது இசை​விழா​வில் தமிழக கலை, பண்​பாட்டுத்துறை இயக்​குநர் எஸ்​.வளர்​மதி பங்​கேற்று கலைஞர்​களுக்கு விருதுகளை வழங்கி கவுர​வித்தார். வலை​யப்​பட்டி காஷ்யப் நாதால​யா​வின் 31-வது இசை​விழா சென்னை நங்​கநல்​லூரில் உள்ள கணேஷ் மண்​டலி சங்​கரா மகாலில் கடந்த 21-ம் தேதி தொடங்​கியது.

இதில் தமிழக கலை பண்​பாட்​டுத் துறை இயக்​குநர் எஸ்​.வளர்​ம​தி, கர்​னாடக இசைக் கலைஞர் அருணா சாய்​ராம் சிறப்பு விருந்​தினர்​களாகப் பங்​கேற்​றனர். விழா​வில் கர்​னாடக இசைக் கலைஞர் நித்ய மகாதேவன், வயலின் வித்​வான் டி.கே.​ரா​மானுஜாச்​சார்​யுலு ஆகியோ​ருக்கு வலை​யப்​பட்டி நாதாலயா சிரோன்​மணி விருதும், கிளாரி னெட் வித்​வான்​கள் வேலூர் வி.பி.என். ராஜா​ராமன், வி.பி.என்​.சேது​ராமன் ஆகியோ​ருக்கு காருக்​குறிச்சி நினைவு விருதும், நாமசங்​கீர்த்​தனக் கலைஞர் செங்​கோட்டை ஹரிஹர சுப்​பிரமணி​யனுக்கு மதுரை சோமு நினைவுவிருதும், மிருதங்​கக் கலைஞர் பட்ரி சதீஷ்கு​மாருக்கு வலை​யப்​பட்டி விருதும் வழங்​கப்​பட்​டன.

நிகழ்ச்​சி​யில் வலை​யப்​பட்டி காஷ்யப் நாதாலயா அமைப்​பின் தலை​வர் ஏ.வெங்​கட்​ரமணி வரவேற்​புரை ஆற்​றி​னார். தொடக்​க​வுரை நிகழ்த்​திய அருணா சாய்​ராம், “கர்​னாடக சங்​கீதம் தெய்​வீகம் நிறைந்​தது.

கர்​னாடக இசை​யின் முக்​கிய மைய​மாக சென்னை திகழ்​கிறது. இசைக் கலைஞர்​களுக்கு கொடுக்​கப்​படும் விருது, அவர்​கள் குடும்​பத்​துக்கு கொடுக்​ கப்​படும் விரு​தாகும்” என்​றார்.

தலை​மை​யுரை ஆற்​றிய எஸ்​.வளர்​ம​தி, “இசை என்​பது பண்​பாட்​டின் அடை​யாளம். கலைஞர்​களை ஊக்​குவிக்​கும் மருந்​தாக பாராட்​டு, விருதுகள் விளங்​கு​கின்​றன. பாமர மக்​களை​யும் சென்று சேரும் வகையில் இசை இருக்க வேண்​டும். அந்த வகை​யில் சென்னை சங்​கமம் நிகழ்ச்​சியை ஜன.14-ம் தேதி முதல்​வர் ஸ்டா​லின், ராஜ ரத்​தினம் மைதானத்​தில் தொடங்கி வைக்​க​வுள்​ளார்” என்​றார்.

ஏற்​புரை வழங்​கிய நித்ய மகாதேவன், “வலை​யப்​பட்டி காஷ்யப் நாதால​யா​வின் விருது கிடைத்​த​தில் மிக​வும் பெரு​மை. இசை அனை​வரை​யும் உயிர்ப்​புடன் வைத்​திருக்​கும்” என்​றார். வலை​யப்​பட்டி ஏ.ஆர்​.சுப்​பிரமணி​யம், கலைஞர்​களை வாழ்த்தி பேசும்​போது, “மனிதனை பக்​கு​வப்​படுத்​து​வது இசை. பண்​டைய காலத்​தில் அரசர்​களின் ஆதர​வில்கோயில்​களில் இசை நிகழ்ச்​சிகள் நடைபெறும்.

பல கலைஞர்​களுக்கு இதனால் வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த ஆண்டு இசை​விழா டிச.25-ம் தேதி வரை நடை​பெறுகிறது. நிறைவு நாளில் வலை​யப்​பட்டி காஷ்யப் குழந்தை நட்​சத்​திர விருதும், கலைஞர்​களுக்​கான உதவித் தொகை​யும் வழங்​கப்​படு​ம்” என்​றார்.

வலை​யப்​பட்டி நாதாலயா அமைப்​பின் செயலர் வலை​யப்​பட்டி எஸ்​.மலர்​வண்​ணன் நன்​றி​யுரை ஆற்​றி​னார். இதையடுத்து நித்ய மகாதேவன் குழு​வினரின் இன்​னிசை நிகழ்ச்சி நடைபெற்​றது.

<div class="paragraphs"><p>வலையப்பட்டி காஷ்யப் நாதாலயாவின் 31-வது இசைவிழாவில் விருது பெற்ற கலைஞர்களுடன் தமிழக கலை, பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.வளர்மதி, கர்னாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம், வலையப்பட்டி ஏ.ஆர்.சுப்பிரமண்யம், வலையப்பட்டி நாதாலயா அமைப்பின் தலைவர் ஏ.வெங்கட்ரமணி, செயலர் எஸ்.மலர்வண்ணன்.</p></div>
வரைவு வாக்காளர் பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்ட இறந்த வாக்காளர்களின் பெயர்கள்: அதிர்ச்சியில் அகரமேல் ஊராட்சி பொதுமக்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in