Last Updated : 02 May, 2014 09:25 AM

 

Published : 02 May 2014 09:25 AM
Last Updated : 02 May 2014 09:25 AM

பாதுகாப்பு இல்லாத ரயில், பஸ் நிலையங்கள்: விழாக்காலங்களில் மட்டும் அக்கறை காட்டினால் போதுமா?

சென்னை ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் போது மான பாதுகாப்பு இல்லை என்று பலதரப்பினரும் கருதி வந்த நிலையில் அதனை மெய்ப்பிக்கும் வகையில், நகரிலேயே அதிக பாதுகாப்பு கொண்ட சென்டிரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது.

பாதுகாப்பு குறைபாட்டுக்கு உதாரணமாக ஆசியாவிலேயே மிகப் பெரிய பஸ் நிலையங்களில் ஒன்றான கோயம்பேடு நிலை யத்தில் பெயரளவில் மட்டும் மெட்டல் டிடெக்டர் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு பெரும்பாலான நேரங்களில் போலீஸார் நின்று சோதனையிடுவ தில்லை. பொங்கல், தீபாவளி போன்ற நேரங்களில் மட்டும் போலீ ஸாரின் நடமாட்டம் சற்று அதிகமாக இருக்கிறது. அந்த சமயத்தில்கூட தீவிர நடவடிக்கை என்பது சில மணி நேரம் மட்டுமே நீடிக்கிறது. மற்ற நாட்களில் மெட்டல் டிடெக் டர் சோதனைக் கூண்டுகள் வெறும் சம்பிரதாயத்துக்காக வைக்கப் பட்டவை போலவே உள்ளன.

அங்குள்ள கண்காணிப்பு அறையில் ரகசிய கேமராவில் பதிவாகும் காட்சிகளை பார்க்க போலீஸார் நியமிக்கப்பட்டிருந் தாலும், 24 மணி நேரமும் அங்கு அவர்கள் இருப்பதில்லை. இத னால் கண்காணிப்பு கேமரா வைத்தும் பலன் இல்லை என்று பயணிகள் கூறுகின்றனர்.

இதுபோல் சென்டிரல் ரயில் நிலையத்தில் பிரதான வாயில் களில் காவலுக்கு இருக்கும் பாது காப்புப் படையினர் அனைத்து பயணிகளும், மெட்டல் டிடெக் டர் சோதனைக் கூண்டு வழியாகச் செல்கிறார்களா என்று கண் காணிப்பதில்லை. பிரதான ரயில் நிலையத்திலேயே இப்படி என்றால், ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்யும் புறநகர் ரயில் நிலையங்களில் கேட்கவே வேண்டாம். பிராட்வே, தி.நகர் போன்ற பஸ் நிலையங்களிலும் இதே கதிதான்.

இது குறித்து தனியார் நிறுவன ஊழியர் வளர்மதி கூறிய தாவது:- தேர்தலுக்கு முந்தைய தினம், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒரு காவல் துறை அதிகாரியைக் கூட பார்க்கமுடியவில்லை. யாரு டைய உடைமைகளும் பரி சோதனை செய்யப்படவில்லை. தீவிரவாதிகளாக இருந்தாலும் சரி, பணத்தை பட்டுவாடா செய்ய அரசியல்வாதிகள் உள்ளே நுழைந் திருந்தாலும் யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லாத நிலை இருந்தது. வெடிகுண்டு மிரட்டல் வந்தால் மட்டும்தான் எல்லாரும் அலர்ட் ஆகிறார்கள். மற்ற நாட்களில் வழக்கம்போல் பாதுகாப்பு குறைவாகவே காணப்படுகிறது.

பெரிய மனிதர்களின் பாதுகாப் புக்காக போலீஸார் குவிக்கப்படு கிறார்கள். ஆனால், ஆயிரக் கணக்கான மக்கள் புழங்கும் இடங் களில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இனியாவது அமல்படுத்துவார்களா?

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பை அதிக ரிப்பதற்காக கடந்த 2011ம் ஆண்டில் தமிழக ரெயில்வே போலீஸார் ஒரு திட்ட அறிக்கையை தயா ரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பினர். ஆனால், அதில் குறிப்பிட்டிருந்த ஒரு சில பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன. பூந்த மல்லி நெடுஞ்சாலையை ஒட்டி யமைந்த பகுதியில் பெரிய கிரில் வைத்த தடுப்புச்சுவர் அமைக்கப் பட்டுள்ளது அவற்றில் ஒன்று. ஆனால், ரயில் நிலையத்துக்குள் தினசரி வந்துசெல்லும் ஆயிரக் கணக்கான பயணிகளின் பைகளை யும் பார்சல்களையும் விமான நிலையத்தில் இருப்பது போல், நவீன முறையில் ஸ்கிரீன் செய் யும் வசதி செய்யவேண்டும் என்ற பரிந்துரையை அமல்படுத்தி யிருந்தால் வெடிகுண்டு வைத்த பை, ரயில் நிலையத்தினுள் சென் றிருக்க முடியாது. இனியாவது அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக போலீ ஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x