Last Updated : 19 Feb, 2015 09:53 AM

 

Published : 19 Feb 2015 09:53 AM
Last Updated : 19 Feb 2015 09:53 AM

ஓரங்கட்டப்பட்டாரா ஃபிளெட்சர்?- இந்திய அணி நிர்வாகம் மறுப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கூட்டம் மற்றும் போட்டிக்கான உத்தி வகுத்தல் உள்ளிட்டவற்றில் இருந்து தலைமைப் பயிற்சியாளர் டங்கன் ஃபிளெட்சர் ஓரங்கட்டப்பட்டதாக வெளியான செய்தியை இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் உள்ளிட்ட அலுவலர் களின் கூட்டம் அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி தலைமையில் திடீரென நடந்ததாகவும், அந்த கூட்டம் தொடர்பாக ஃபிளெட்சருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அதை முற்றிலும் மறுத்துள்ள இந்திய அணியின் ஊடக மேலாளர் ஆர்.என்.பாபா, “அதுபோன்றதொரு கூட்டம் எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள் கிறேன். அது முற்றிலும் உண் மைக்கு புறம்பானது. இதுபோன்ற செய்தி புனையப்பட்ட கற்பனைக் கதையாகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x