Published : 05 Feb 2015 07:22 PM
Last Updated : 05 Feb 2015 07:22 PM
சட்டக் கல்லூரி விவகாரத்தில் போலீஸ் கையாண்ட விதம் ஏற்கத்தக்கது அல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் ஜி.கே வாசன் பேசினார்.
''சட்டக் கல்லூரி விவகாரத்தில் போலீஸ் கையாண்ட விதம் ஏற்கத்தக்கது அல்ல. சட்டக் கல்லூரி மாணவர்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 120 ஆண்டுகள் பழமையான டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இரண்டாகப் பிரித்து திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மாற்றப்படும் என்ற தகவல் வெளியானது. சட்டக்கல்லூரி மாணவர்கள் தற்போது செயல்படும் இடத்திலேயே சட்டக் கல்லூரியை செயல்பட வேண்டும் . வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த இரண்டு நாட்களாகப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT