Published : 10 Feb 2015 10:03 AM
Last Updated : 10 Feb 2015 10:03 AM

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம்: சென்னையில் நாளை பேச்சுவார்த்தை

அரசு போக்குவரத்து ஊழியர் களின் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சென்னையில் நாளை நடக்கிறது. அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத ஊதிய உயர்வு கேட்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த டிசம்பரில் 4 நாள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அமைச்சர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேச அரசு தரப்பில் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதன்படி, அரசு சார்பில் 11 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழுவினர், தொழிற்சங்க பிரதிநிதி களுடன் பேச்சுவார்த்தையை நாளை தொடங்குகின்றனர்.

இதுதொடர்பாக சிஐடியு துணைத் தலைவர் எம்.சந்திரன் கூறும்போது, ‘‘அரசு அமைத்துள்ள குழுவினர், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் 11-ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள பணிமனையில் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். பேச்சுவார்த் தையின்போது, 12-வது புதிய ஒப்பந்தத்தில் 50 சதவீத ஊதிய உயர்வு, 240 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்றோருக்கு உடனடி யாக பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத் துவோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x