Published : 05 Feb 2015 10:03 AM
Last Updated : 05 Feb 2015 10:03 AM

விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் டிரா

ஜெர்மனியில் நடைபெற்று வரும் கிரெங் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தனது 2-வது சுற்று ஆட்டத்தையும் டிரா செய்தார்.

ஆனந்த் முதல் சுற்றில் இத்தாலியின் பாபினோ கருனாவுடன் டிரா செய்தார். ஜெர்மனியின் அர்காட் நைட்டிச்சை அவர் 2-வது சுற்றில் எதிர்கொண்டார். இந்த போட்டியும் டிராவில் முடிந்தது.

இந்த செஸ் போட்டியில் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் உட்பட 8 முன்னணி வீரர்கள் பங்கேற் றுள்ளனர். போட்டில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாட வேண்டும். மொத்தம் 7 சுற்றுகள் நடைபெறும்.

கார்ல்சன் தனது முதல் சுற்று ஆட்டத்தில் இங்கி லாந்தின் மைக்கேலை வென்றார். அடுத்து ஆனந்தை எதிர்கொள்ள இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x