Published : 16 Feb 2015 11:58 AM
Last Updated : 16 Feb 2015 11:58 AM

எனக்காக பிரார்த்தனை செய்வீர்: அலுவலக முதல் நாளில் அர்விந்த் கேஜ்ரிவால் ட்வீட்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று முதல் நாளாக அலுவலகம் செல்கிறார். இதனையொட்டி அவர் பதிந்துள்ள ட்வீட்டில், "காய்ச்சல் போய்விட்டது. நலமாக இருக்கிறேன். காலை நடைப்பயிற்சி, யோகா பயிற்சியை மீண்டும் துவங்கினேன். இன்று அலுவகத்தின் முதல் நாள், எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.

டெல்லி தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. தேர்தல் முடிவான நாளில் இருந்து அர்விந்த் கேஜ்ரிவால் கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். வெற்றிக் கொண்டாட்டங்களைக்கூட பாதியில் முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். அவர் இன்று தனது உடல்நிலை சீராகியுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், கேஜ்ரிவால் தலைமையில், இன்று அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x