Published : 13 Jan 2015 09:39 AM
Last Updated : 13 Jan 2015 09:39 AM

போதையில் வாகனம் ஓட்டிய 5,903 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் 2012-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 1,449 பேரும், 2013-ல் 1,365 பேரும், 2014-ல் 1,118 பேரும் இறந்துள்ளனர்.

தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால் சாலை விபத்துக ளில் இறப்பவர்களின் எண் ணிக்கை ஆண்டுதோறும் குறைத்து வருகிறது.

போதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த ஆண்டு 55,288 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு 46,140 பேருக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளோம். கடந்த ஆண்டு மட்டும் போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக 5,903 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து இருக்கிறோம்.

மேலும், 16,616 பேரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவல கங்களுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x