Published : 23 Jan 2015 11:55 AM
Last Updated : 23 Jan 2015 11:55 AM

மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் இரோம் ஷர்மிளா

ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து போராடி வரும் இரோம் ஷர்மிளா மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

உண்ணாவிரதம் இருப்பது தற்கொலை செய்துகொள்வதாகாது என்று கூறி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும், அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். எனவே, போலீஸார் மீண்டும் புதிய வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். இந்நிலையில், இரோம் ஷர்மிளாவை மணிப்பூர் மாநில மாவட்ட நீதிமன்றம் நேற்று நீதிமன்றம் விடுதலை செய்தது.

விடுதலையானதும் தனது சொந்த ஊரான இம்பாலுக்குச் சென்ற அவர் மீண்டும் தனது உண்ணவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x