Published : 03 Jan 2015 12:02 PM
Last Updated : 03 Jan 2015 12:02 PM

தோனி பட்டப் படிப்பை முடிக்க வேண்டும்: கல்லூரி முதல்வர் அழைப்பு

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி தனது பி.காம் பட்டப்படிப்பை முடிக்க வேண்டுமென்று அவரது கல்லூரி முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

தனது சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள புனித சேவியர்ஸ் கல்லூரியில் 2008-ம் ஆண்டு தோனி பட்டப்படிப்பில் சேர்ந்தார். அதன் பிறகு அவர் கிரிக்கெட்டில் தனது முழு கவனத்தையும் செலுத்தியதால் பட்டப் படிப்பை முடிக்கவில்லை. இப்போது தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அவருக்கு கூடுதல் நேரம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தோனியின் கல்லூரி முதல்வர் நிக்கோலஸ் கூறியது: 2008-ம் ஆண்டு தோனியுடன் பட்டப் படிப்பில் சேர்ந்தவர்களில் 1,790 பேர் பட்டம் முடித்துவிட்டனர். கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல. எனவே தோனி மீண்டும் தனது படிப்பை தொடரலாம். எங்கள் கல்லூரியில் சேரும் மாணவர்கள் அனைவரும் படிப்பை முமுமையாக நிறைவு செய்வதுதான் எங்களுக்கு பெருமை. தோனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்று முடிவு செய்துவிட்டதால் அவருக்கு இனி படிப்பதற்கு அதிக நேரம் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி அவர் பட்டப்படிப்பை நிறைவு செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x