Last Updated : 13 Dec, 2014 10:23 AM

 

Published : 13 Dec 2014 10:23 AM
Last Updated : 13 Dec 2014 10:23 AM

நின்ற ரயில் மீது மற்றொரு ரயில் மோதல்: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

பிஹார் மாநிலம், பார்ஹ் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது பயணிகள் ரயில் பக்கவாட்டாக வந்து மோதியது.

இதில் பயணிகள் ரயிலின் என்ஜின் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பிஹார் தலைநகர் பாட்னா வில் இருந்து 40 கி.மீட்டர் தொலை வில் பார்ஹ் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத் துக்கு நேற்று காலை வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (புதுடெல்லி- குவாஹாட்டி) வந்தது.

ரயில் நிலையத்தில் அந்த எக்ஸ்பிரஸ் நின்று கொண் டிருந்தபோது பாட்னா பயணிகள் ரயில் அதே திசையில் பக்கவாட் டில் வந்து மோதியது.

இதில் பாட்னா ரயிலின் என்ஜின் தண்டவாளத்தில் இருந்து விலகியது. இந்த விபத்தில் இரு ரயில்களிலும் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x