Published : 17 Dec 2014 12:44 PM
Last Updated : 17 Dec 2014 12:44 PM

குழந்தைகள் சுட்டுக் கொலை: தவ்ஹீத் ஜமா அத் கண்டனம்

பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் உள்பட 126 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்துக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் (டி.என்.டி.ஜே.) கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டி.என்.டி.ஜே. துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது யூசுப் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாகிஸ்தானில் பெஷாவர் நகர் பள்ளிக்கூடத்தில், 84 குழந்தைகள் உட்பட 126 அப்பாவிகளை தீவிரவாதி கள் சுட்டுக்கொலை செய்திருக் கின்றனர் என்ற செய்தி மனிதாபிமானம் கொண்ட அனைவரையும் குலை நடுங்கச் செய்துள்ளது.

இந்த கொடூர நிகழ்வை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும். இஸ்லாத்தின் அடிப் படைக்கும் மனிதத் தன்மைக்கும் எதிரான தீவிரவாதிகளின் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை டி.என்.டி.ஜே. வன்மையாகக் கண்டிக்கிறது’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x