Published : 03 Nov 2014 10:46 AM
Last Updated : 03 Nov 2014 10:46 AM

செல்போன் மூலம் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் 7 கோடி

செல்போன் மூலம் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் 7 கோடியாக உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் இந்தசேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் என்று இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்தார்.

எங்களது வாடிக்கையாளர்களாக உள்ள 7 கோடி பேரில் மாதத்துக்கு ஒருமுறையாவது பயன்படுத்துவோரும் உள்ளனர். வாட்ஸ் அப் நிறுவ னத்தை சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் 1,900 கோடி டாலருக்கு வாங்கியது.

அப்போது 6 கோடியாக இருந்த இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இப்போது 7 கோடியாக உயர்ந்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனத்தில் மொத்தம் 80 பணியாளர்கள்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x