Published : 12 Oct 2014 03:29 PM
Last Updated : 12 Oct 2014 03:29 PM

ஹுத்ஹுத் சீற்றத்தில் செயலிழந்தது புயல் எச்சரிக்கை மைய ரேடர்

ஹுத்ஹ்த் புயல் சீற்றத்தில் விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையத்தின் ரேடர் செயலிழந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஹுத்ஹுத் புயல் நெருங்கி வந்த நிலையில் பலத்த காற்று வீசியது. கடல் சீற்றமும் அதிகமாக இருந்தது. இந்நிலையில் விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையத்தின் ரேடர் செயலிழந்தது.

கடந்த இரண்டு நாட்களாக புயல் வரும் திசையை துல்லியமாக கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இந்த மையத்தில் இருந்த ரேடர் பேருதவியாக இருந்த நிலையில் இன்று காலை புயல் கரையை கடக்கும் சில மணி நேரங்களுக்கு முன்னால் செயலிழந்தது.

இதனையடுத்து ஆந்திர அரசு கடற்படை ராடர் உதவியை நாடியது. இந்தியக் கடற்படை ராடர் கண்காணிப்பில் கிடைத்த தகவல்கள் ஆந்திர அரசுக்கு உடனுக்குடன் பகிரப்பட்டது.

புயல் கரையை கடந்துவிட்டது, கடக்கும் போது 185 கி.மீ வேகத்தில் காற்று வீசியது என்ற தகவலைக்கூட கடற்படை ரேடர் மூலமே தெரிந்து கொண்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x