Published : 10 Jun 2014 07:54 PM
Last Updated : 10 Jun 2014 07:54 PM

மகாராஷ்டிராவில் 4 மாதங்களில் 559 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் 559 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மாநில சட்டமன்றக் குழு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை நாளொன்றுக்கு 3 விவசாயிகள் வீதம் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இயற்கை பேரிடர் காரணமாக 85 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், இவர்கள் குடும்பத்திற்கு மொத்தம் ரூ.11 கோடி நிவாரணம் அளித்திருப்பதாகவும் மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் பதங்ராவ் காதம் தெரிவித்துள்ளார்.

மேலும் விவசாயிகள் தற்கொலைக்கான காரணங்களை கண்டறிய விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x