Published : 11 Sep 2014 10:25 AM
Last Updated : 11 Sep 2014 10:25 AM

பாகிஸ்தான் தாக்குதலில் 35 தலிபான் தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் அந்நாட்டு ராணுவம் புதன்கிழமை நடத்திய வான்வழி தாக்குதலில் 35 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தட்டா கெல் பள்ளத்தாக்கின் வடமேற்குப் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை குறிவைத்து விமானப்படை விமானங்கள் மூலம் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த 3 இடங்கள் தரைமட்டமாயின. அத்துடன் 35 தீவிரவாதிகள் பலியாயினர்” என கூறப்பட்டுள்ளது.

பழங்குடியினத்தவர்கள் அதிக அளவில் வசிக்கும் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டம் ஆப்கானிஸ்தானை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக ‘ஜர்ப்-இ-அஸ்ப்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஜூன் மாதம் தாக்குதலை தொடங்கியது.

பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 தீவிரவாதிகள், ஒரு வீரர், ராணுவத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x