Published : 02 Jul 2014 08:35 AM
Last Updated : 02 Jul 2014 08:35 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: 15 பேரை கண்டுபிடித்த மோப்ப நாய்கள்

இடிபாடுகளில் சிக்கியிருந்த 15 பேரை, தீயணைப்புத் துறையின் 5 மோப்ப நாய்கள் கண்டுபிடித்துள்ளன.

மீட்கும் பணியில் போலீஸார், தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், சுகாதாரத் துறையினர், மாநகராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் என 2 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடிக்கும் பணியில் தீயணைப்புத் துறையின் ஜூலி, ஓரி, ஜீனா, ஜாக், ஜான்சி ஆகிய 5 நாய்கள் ஈடுபட்டுள்ளன.

ஜூலி 2 பேரை உயிருடனும், ஓரி உயிருடன் 2 பேரையும் உயிரிழந்த ஒருவரையும், ஜீனா உயிருடன் 2 பேரையும் உயிரிழந்த 2 பேரையும், ஜாக் உயிருடன் 3 பேரையும், உயிரிழந்த ஒருவரையும், ஜான்சி உயிருடன் 2 பேரையும் கண்டுபிடித்துள்ளன. மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்ட ஜீனா என்ற நாய்க்கு காலில் அடிபட்டுள்ளதால், தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தீயணைப்பு வீரர் அனிஷ் கூறியதாவது: உள்ளே யாராவது சிக்கி இருந்தால், எங்கள் நாய்கள் அந்த இடத்துக்கு சென்று குரைக்கும். யாராவது இறந்து இருந்தால், அந்த இடத்தில் சென்று நின்றுவிடும். பிறகு அந்த இடத்தையே சுற்றி வரும். மேலும், உள்ளே சென்று அங்கு படிந்துள்ள ரத்தத்தை நாக்கால் நக்கும். அதை வைத்து நாங்கள் மீட்பு பணியில் ஈடுபடுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x