Published : 15 Apr 2015 11:32 AM
Last Updated : 15 Apr 2015 11:32 AM
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு தனியார் துறையின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.
தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கலாம்.
மேலும், தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரி செய்து கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்தல், புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப்பம் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT