Published : 11 Apr 2015 09:15 AM
Last Updated : 11 Apr 2015 09:15 AM
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுந்து 40-வது முறையாக விபத்து ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் மேற்கூரைகள், கண்ணாடிகள், கண்ணாடி கதவுகள் மற்றும் கிரானைட் கற்கள் உடைந்து விழுவது அடிக்கடி நடக்கிறது. இதனால் சென்னை விமான நிலையத்துக்குள் வரும் பயணிகள் மற்றும் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் விமான நிலையத்தின் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் பகுதியில் கண்ணாடி ஒன்று திடீரென்று உடைந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதையடுத்து, உடைந்து சிதறிய கண்ணாடிகளை ஊழியர்கள் அகற்றினர். 40-வது முறையாக நடத்த விபத்து சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT