Published : 09 Apr 2015 04:36 PM
Last Updated : 09 Apr 2015 04:36 PM

சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு: சென்னையில் கல்வி ஆலோசனை முகாம்

சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் கல்வி ஆலோசனை முகாம் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏப்ரல் 12-ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்க உள்ளது.

சங்கர நேத்ராலயா அகாடமியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய செயல்திறன்மேம்பாட்டு நிறுபனம் ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் பி.எஸ்.சி, பி.பி.ஏ மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல், சுகாதாரம் குறித்து அதிகம் கவலைப்படும் இந்த காலகட்டத்தில் சுகாதாரம் சார்ந்த அறிவியல் படிப்புகளில் இளநிலை மற்றும் பட்டயப்படிப்புகள் படித்தால் வேலைவாய்ப்புகளும் எளிதில் கிடைக்கும். சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் அளிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகள் அதிக அளவில் அளிக்கும் இப்படிப்புகள் பற்றி சுகாதாரத்துறையில் அனுபவம் உள்ள வல்லுநர்கள் கல்வி ஆலோசனை தர உள்ளனர். இந்த கல்வி ஆலோசனை முகாம் ஏப்ரல் 12-ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்க உள்ளது.

இலவச முன்பதிவிற்கும், மேலும் பல விவரங்களுக்கும் தொடர்பு கொள்க:

சங்கர நேத்ராலயா,

கே.என்.பிர்வோ ஆராய்ச்சி வளாக ஆடிட்டோரியம்,

18, கல்லூரி சாலை,

நுங்கம்பாக்கம் (டி.பி.ஐ எதிரில்),

சென்னை - 6.

செல்பேசி எண்: 94440 33082

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x