Published : 26 Apr 2015 10:58 AM
Last Updated : 26 Apr 2015 10:58 AM

திபெத்தில் 12 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் திபெத்தையும் உலுக்கியது. திபெத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்தன. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 13-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நேபாள எல்லையையொட்டிய கியிராங், டிராம் மாவட்டங்களில் தகவல் தொடர்பு சிக்னல்கள் தடைபட்டன. ஏராளமான வீடுகள் நொறுங்கின. பிராந்திய தலைநகரான லாசா மற்றும் ஷிகாட்சே நகரங்களில் நில அதிர்வு கடுமையாக உணரப்பட்டது. நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்ட 12 நிமிடங்களுக்குப் பிறகு தென்மேற்கு சீனாவின் சாங்கிங் பகுதியில் உள்ள கிஜியாங் மாவட்டத்தில் உணரப்பட்டதாக சீன புவியியல் வானிலை மையம் தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x