Published : 10 Feb 2015 03:25 PM
Last Updated : 10 Feb 2015 03:25 PM
ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.48 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சாக்சேனா தெரிவித்துள்ளார். 17,250 வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு ரூ.48 லட்சத்து 76 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக வரும் அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், புகார் குறித்து விசாரணை நடத்தாமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகளின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரித்துள்ளதாகவும் சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT