Published : 10 Feb 2015 10:53 AM
Last Updated : 10 Feb 2015 10:53 AM

சட்டவிரோதமாக கணக்கு வைத்திருக்கவில்லை: அம்பானி சகோதரர்கள் விளக்கம்

வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்ய வில்லை என்று அம்பானி சகோ தரர்கள், நரேஷ் கோயல் மற்றும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் நாராயண் ரானே உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள எச்எஸ்பிசி வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் புதிய பட்டியல் வெளியாகி உள்ளது. .

இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் கூறும் போது, “என்னிடம் கருப்புப் பணம் இல்லை. மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. அனைத்து விதிமுறை களையும் நான் கடைப்பிடித்து வருகிறேன்” என்றார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெயரிலோ அதன் தலைவர் முகேஷ் அம்பானி பெயரிலோ உலகில் உள்ள எந்த ஒரு நாட்டிலும் சட்டவிரோத வங்கிக் கணக்கு இல்லை” என்றார்.

அனில் அம்பானியின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “வெளி நாட்டில் உள்ள எச்எஸ்பிசி வங்கிக் கிளையில் அனில் அம்பானி பெயரில் எந்த ஒரு கணக்கும் இல்லை” என்றார்.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் நாராயண் ரானே கூறும்போது, “என் பெயரிலோ, எனது குடும்பத்தினரின் பெயரிலோ வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு எதுவும் இல்லை” என்றார்.

இங்கிலாந்தில் வசித்துவரும் இந்திய தொழிலதிபர் ஸ்வராஜ் பால் கூறும்போது, “என்னுடைய வங்கிக் கணக்குகள் அனைத்தும் சட்டத்துக்குட்பட்டவை. அவற்றுக்கு நானே பொறுப்பு. எனது வருமானத்துக்கான வரியை முறையாக செலுத்தி வருகிறேன்” என்றார். எம்மார் எம்ஜிஎப் மற்றும் டாபர் குழும நிறுவனர் குடும்பத்தைச் சேர்ந்த பர்மன்ஸ் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x