Last Updated : 03 Feb, 2015 10:16 AM

 

Published : 03 Feb 2015 10:16 AM
Last Updated : 03 Feb 2015 10:16 AM

உக்ரைன் கிளர்ச்சிப் படையில் புதிதாக ஒரு லட்சம் பேர் சேர்ப்பு: முக்கிய நகரை கைப்பற்ற கடும் சண்டை

உக்ரைனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்த நாட்டு கிளர்ச்சிப் படையில் புதிதாக ஒரு லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 9 மாதங்களாக உக்ரைனில் கடைப்பிடிக்கப்பட்ட போர் நிறுத்தம் அண்மையில் முறிந்தது. அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

கிழக்கு உக்ரைனின் டோன்ஸ்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு உக்ரைன் கிளர்ச்சிப் படை செயல்பட்டு வருகிறது. அந்த நகரை குறிவைத்து அரசுப் படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. பதிலுக்கு அரசு கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களை கிளர்ச்சிப் படை தாக்கி வருகிறது.

கிழக்கு உக்ரைனின் டெபால்ட் செவி நகர் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நகரைக் கைப்பற்ற கிளர்ச்சிப் படை வீரர்கள் கடுமையாக போரிட்டு வருகின்றனர். அந்த நகரை நோக்கு கிளர்ச்சிப் படை முன்னேறி வருகிறது வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெபால்ட்செவி நகரில் சுமார் 25 ஆயிரம் பேர் வசித்தனர். தற்போது பாதிக்கும் மேற்பட்ட மக்கள் நகரை விட்டு வெளியேறிவிட்டனர்.

உள்நாட்டுப் போர் குறித்து உக்கரைன் ராணுவ செய்தித் தொடர்பாளர் வோலோடிமிர் கூறியபோது, கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா போர் வீரர்களையும் ஆயுதங்களையும் அளித்து வருகிறது, அதனால்தான் கிளர்ச்சிப் படை வலுவாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

இருதரப்பு சண்டையில் கடந்த ஏப்ரல் முதல் இதுவரை சுமார் 5100 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x