Published : 12 Feb 2015 10:28 AM
Last Updated : 12 Feb 2015 10:28 AM

ஆந்திராவில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 3 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியாயினர்.

தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த 3 மாதங்களாக பன்றிக் காய்ச்சல் நோயால் பலர் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலத்தில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக் காய்ச்சல் நோயின் அறிகுறி இருந்ததால், இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 556 பேருக்கு இந்நோய் இருப்பது தெரியவந்தது. இவர்கள் பல்வேறு அரசு, தனியார் மருத்துவ மனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தெலங்கானாவில் மட்டும் இதுவரை பன்றிக் காய்ச்சல் நோய்க்கு 41 பேர் பலியாகி உள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் இந்நோய் பரவியது. இதில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் நேற்று அனந்தபூர் மாவட்டம் கதிரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும், ஓங்கோலில் இருவரும் உயிரிழந்தனர். இதனால் ஆந்திராவில் பலி எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x