Published : 11 Feb 2015 02:30 PM
Last Updated : 11 Feb 2015 02:30 PM

சுனந்தா கொலை: சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக, அவரது கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு நாளை மீண்டும் விசாரணை மேற்கொள்கிறது.

இத்தகவலை டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, சசி தரூரிடம் நாளை மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும். சில விஷயங்கள் குறித்து அவரிடம் தெளிவான விளக்கத்தைப் பெற விசாரணைக் குழு விரும்புகிறது.

ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட சாட்சியங்கள் அளித்த தகவல்கள் ஆராயப்பட்டு வருகின்றன. விசாரணை முழுமையாக முடிந்த பிறகே ஒரு முடிவுக்கு வர முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x