Published : 24 Feb 2015 05:03 PM
Last Updated : 24 Feb 2015 05:03 PM

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு: தா.பாண்டியன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு தொடங்கி உள்ளது என்று இந்திய கம்யூனிஸ் கட்சி பொதுச் செயலாளர் தா.பாண்டியன் குற்றம்சாட்டினார்.

கோவையில் தா.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும் போது, ''தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு தொடங்கி உள்ளது. மின்வெட்டால் தமிழக நிறுவனங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை ஆதரிக்கக் கூடாது. அந்த சட்டத்தை ஆதரிக்கும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.'' இவ்வாறு தா.பாண்டியன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x