Published : 12 Feb 2015 03:15 PM
Last Updated : 12 Feb 2015 03:15 PM
இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் எண்ணங்களும் பிரதிபலிப்பும் என்ற இரண்டு புத்தகங்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு பரிசாக வழங்கினார்.
டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ள அர்விந்த் கேஜ்ரிவால் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, 'இந்திய அரசியலமைப்பு சட்டம்' மற்றும் 'எண்ணங்களும் பிரதிபலிப்பும்' ஆகிய இரண்டு புத்தகங்களையும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கேஜ்ரிவாலுக்கு பரிசாக வழங்கினார்.
இதனை ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர் மணிஷ் சிசோதியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பின்போது ஆட்சி அமைப்பது குறித்து எதுவும் பேசவில்லை என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT