Published : 24 Jan 2015 09:48 AM
Last Updated : 24 Jan 2015 09:48 AM

உதவி பிரிவு அதிகாரி பணிக்கு நேர்முகத்தேர்வு

தமிழ்நாடு தலைமைச்செயலகப் பணியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) பதவியில் 16 காலிப்பணியிடங்களுக்கு கடந்த 6.12.2012 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கான எழுத்துத்தேர்வு 3.02.13 அன்று நடந்தது. நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட 46 பேருக்கு வரும் 28-ம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் (டிஎன்பிஎஸ்சி) நேர்காணல் நடைபெற உள்ளது.

இந்த நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக்கடிதம் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x