Published : 21 Jan 2015 10:07 AM
Last Updated : 21 Jan 2015 10:07 AM

வீடுகளில் ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்க தடை: கருப்புப் பண விவகாரக் குழு பரிந்துரை

வீடுகளில் ரூ.15 லட்சத்துக்கு மேல் வைத்திருக்க தடை விதிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக் குக் கொண்டு வருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழு தனது பரிந்துரைகளை நேற்று சமர்ப்பித்தது. அதில், ‘வரி ஏய்ப்பு செய்பவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் பதுக் கப்பட்ட தொகைக்கு நிகராக சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும். தனி மனிதர்கள் ரூ. 15 லட்சத்துக்கு மேல் கையி ருப்பு ரொக்கமாக வைத்திருக்க தடை விதிக்க வேண்டும்’ என்று பரிந்துரை செய்துள்ளது.

இதனிடையே, கருப்புப் பண விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக்குழு இதுவரை மேற்கொண்ட நடவடிக் கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்எல்.தத்து தலைமையிலான அமர்வு நேற்று உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x