Published : 03 Apr 2015 11:09 AM
Last Updated : 03 Apr 2015 11:09 AM
சிங்கப்பூரில் தமிழ் மொழித் திருவிழா இன்று தொடங்கி வரும் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சிங்கப்பூர் வளர் தமிழ் இயக்கம் சார்பில் இந்த விழா நடத்தப்படுகிறது. சிங்கப்பூர் பிரதமர் அலுவலக அமைச்சர் ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைக்கிறார்.
இந்த நிகழ்ச்சி உள்ளூர் தொலைக்காட்சியான வசந்தம் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப் பாகிறது. toggle.sg என்ற இணைய தளத்திலும் நிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பை காணலாம்.
40-க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இணைந்து இந்த திருவிழாவை நடத்துகின்றனர். இதில் தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் நிகழ்ச்சிகளும், தமிழை வளர்க்கும் அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
வளர் தமிழ் இயக்கம் 2000-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு முதல் தமிழ் மொழித் திருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்கும் அமைப்புகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT