Published : 26 Mar 2015 11:13 AM
Last Updated : 26 Mar 2015 11:13 AM

சிறந்த தலைவர்

சிங்கப்பூரைக் கட்டமைத்த தலைவர் லீ குவான் யூ மரணத்தின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்திருக்கிறது. மன்னார்குடி பகுதி கிராம மக்கள் அவரது மறைவையொட்டி அஞ்சலிச் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார்கள் எனும் செய்தி ஆச்சரியமளித்தது.

சிங்கப்பூரில் தங்கள் உறவினர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை லீ குவான் யூ உயர்த்தியதை அந்தப் பகுதி மக்கள் மறக்கவில்லை.

அவரது தீர்க்கமான, தெளிவான, தன்னலமற்ற நடவடிக்கைகளால் பயனடைந்ததால்தான் அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு தமிழக கிராமத்தில் வாழும் மக்கள்கூட கலங்கி நிற்கிறார்கள்.

- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x