Published : 27 Mar 2015 09:52 AM
Last Updated : 27 Mar 2015 09:52 AM

கோலியின் மோசமான ஆட்டத்துக்கு அனுஷ்கா மீது பழி சுமத்துவதா?- கங்குலி பாய்ச்சல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், அதற்கு அவருடைய காதலியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவே காரணம் என டுவிட்டரில் ஏராளமான ரசிகர்கள் வசை பாடியுள்ளனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியிருப்பதாவது: அனுஷ்கா சர்மா மீது பழிசுமத்தப் பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. அவர் ஆஸ்திரேலியா வந்ததில் என்ன தவறு?

மற்ற வீரர்களின் குடும்பத்தினரைப் போலவே அனுஷ்காவும் கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்திருக்கிறார்.

அப்படியிருக்கையில் கோலி சரியாக விளையாடாததற்கு அனுஷ்கா மீது பழி சுமத்துவது நியாயமற்றது. இது ரசிகர்களின் முதிர்ச்சியற்ற தன்மையையே காண்பிக்கிறது.

இரண்டு பேர் காதலிப்பதில் என்ன தவறு? என கங்குலி கேள்வியெழுப்பி யுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x