Published : 25 Mar 2015 10:08 AM
Last Updated : 25 Mar 2015 10:08 AM

தெலங்கானா மக்கள் சோனியாவை மறந்துவிட்டனர்: டிஆர்எஸ் கட்சி எம்.பி. கவிதா பேச்சு

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை தெலங்கானா மக்கள் மறந்து விட்டனர் என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி எம்.பி.யும் தெலங் கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கே.கவிதா கூறினார்.

கே.கவிதா நேற்று தனது சொந்தத் தொகுதியான நிஜாமா பாத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டார். அப்போது ரஞ்சேல் மண்டலம், பூபல்லி பகுதியில் ‘மிஷன் காகதீயா’ எனும் ஏரி தூர் வாரும் பணியை அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

தெலங்கானாவை இத்தனை ஆண்டுகள் ஆட்சிசெய்த ஆந்திரத் தலைவர்களால் இப்பகுதி எந்தவித வளர்ச்சியும் அடையவில்லை. தெலங்கானாவை வழங்கிய காங்கிரஸ் கட்சியும் இப்பகுதிக் காக இதுவரை எதுவும் செய்ய வில்லை. சோனியா காந்தியை மக்கள் மறந்துவிட்டனர். நிஜாமா பாத் பகுதி காங்கிரஸார் பலர் இத்தொகுதிக்கு எதுவும் செய்யா மல் தங்கள் அரசியல் காலத்தை வீணாக்கி விட்டனர்.

இதனால்தான் தெலங்கானா மக்கள் தற்போது டிஆர்எஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்தியுள் ளனர். மக்களின் நம்பிக்கைக்கு எந்தவித குறையும் ஏற்படாதவாறு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முதல்வர் செய்து வருகிறார். இதில் மாநிலத்தின் 46 ஆயிரம் ஏரிகளும் தூர்வாரப்பட்ட பின்னர் நமக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்பே இல்லை. இவ்வாறு கவிதா எம்.பி. பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x