Last Updated : 20 Mar, 2015 02:32 PM

 

Published : 20 Mar 2015 02:32 PM
Last Updated : 20 Mar 2015 02:32 PM

காஷ்மீர் தாக்குதல்: மாநிலங்களவையில் விளக்கமளிக்கிறார் ராஜ்நாத் சிங்

காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் காவல் நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளிப்பார் எனத் தெரிகிறது.

காஷ்மீர் சம்பவம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் தாக்குதல் குறித்தும், தாக்குதலுக்குப் பின் அங்கு தற்போதுள்ள சூழ்நிலை குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் மாநிலங்களவையில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ராஜ்நாத் சிங் தனது ட்விட்டரில், "காவல் நிலைய தாக்குதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கத்துவாவில் நமது பாதுகாப்புப் படையினர் போற்றுதற்குரிய பணி செய்துள்ளனர். தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர் பலியானதற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மாநில அரசிடம் ராஜ்நாத் சிங் விளக்கம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x