Published : 04 Mar 2015 10:11 AM
Last Updated : 04 Mar 2015 10:11 AM

நீலாங்கரை என்கவுன்ட்டர் சம்பவம்: போலீஸுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை அருகே காவல்துறையி னரால் இருவர் சுட்டுக் கொல்லப் பட்ட (என்கவுன்ட்டர்) வழக்கில் காவல்துறை ஆய்வாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சென்னையை அடுத்த நீலாங்கரையில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலு ஆகியோரை காவல்துறை ஆய்வாளர்கள் நந்தகுமார், மகேந்திரன் ஆகியோர் சுட்டுக் கொன்றனர். இந்த ஆய்வாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு இவ் வழக்கை விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ் சேரி வேலு ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலு வையில் உள்ளன. இவர்கள் வந்த வாகனத்தை விசாரணைக்காக காவல்துறையினர் வழிமறித்த போது தாக்கியுள்ளனர். இதில் காவல்துறையினர் சிலர் காய மடைந்துள்ளனர். அப்போது தற்காப்புக்காக காவல்துறை யினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் இறந்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக, இறந் தவர்களின் குடும்பத்தினர் வாக்குமூலத்துடன் கோட்டாட் சியர் சமர்ப்பித்த விரிவான விசா ரணை அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மனுதார ரும் இந்த அறிக்கையை எதிர்க்க வில்லை.

மேற்படி சம்பவத்தில் காய மடைந்த போலீஸ்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லா மல் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். எந்தச் சம்பவத் திலும் ஒருவர் இறந்தார் என்றால் அதை கொலை வழக்காகத்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது. மனுவைத் தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x