Published : 09 Feb 2015 07:36 PM
Last Updated : 09 Feb 2015 07:36 PM
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிமுக பணப் பட்டுவாடா செய்கிறது. இதில், அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று திமுக வழக்கறிஞர் பரந்தாமன், தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் புகார் மனு அளித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்கு வரும் 13-ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், இடைத்தேர்தலில் போட்டியிடும் பல்வேறு கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவிடம் வழக்கறிஞர் பரந்தாமன் புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் வழக்கறிஞர் பரந்தாமன் கூறி இருப்பதாவது:
'' இரவில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு அதிமுக பணப்பட்டுவாடா செய்துள்ளது. இதில் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது . இதனால், தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையை இழந்துள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியார் ஹோட்டலில் தங்கினார். முதல்வர் தங்கிய நேரத்திலேயே பணப் பட்டுவாடா நிகழ்ந்துள்ளது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதற்காக திருச்சி சென்று வந்தார் என்று விசாரிக்கவேண்டும் என்று அந்த புகார் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விசாரணை மேற்கொள்ளாத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.''
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT