Published : 04 Feb 2015 03:52 PM
Last Updated : 04 Feb 2015 03:52 PM

ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சல் பலி 62 ஆக அதிகரிப்பு

ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 29 மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

இந்நிலையில் இன்று மட்டும் இம்மாநிலத்தின் பிகானர், ஆஜ்மீர், பார்மர், கோட்டா, உதய்பூர், பன்ஸ்வாரா, சித்தோர்கர் ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 10 பேர் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளனர்.

மேலும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 1200 பேரில் 366 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x