Last Updated : 02 Feb, 2015 03:37 PM

 

Published : 02 Feb 2015 03:37 PM
Last Updated : 02 Feb 2015 03:37 PM

2014 நாடாளுமன்றத் தேர்தல் பணி ஊதியத்துக்கு பல மாதங்களாக காத்திருக்கும் அரசு ஊழியர்கள்

நாடாளுமன்றத் தேர்தலில், வால்பாறை பகுதிகளில் தேர்தல் பணியாற்றிவர்களுக்கு, இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது, அரசு ஊழியர்கள் ஏராளமானோர் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டனர். வாக்குச்சாவடிகளின் தேவைகளை சரிசெய்வதிலிருந்து வாக்குச்சாவடிகளிலேயே தங்கி, வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை அவர்களது பணி தொடர்ந்தது.

இதில், பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட மலைப்பகுதி மற்றும் சமவெளிப் பகுதி கிராமங்களுக்கு, நூற்றுக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டனர். பெரும்பாலானோருக்கு பணி அடிப்படையில், தேர்தல் பணி ஊதியம் வழங்கப்பட்டது.

ஆனால், வால்பாறை சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்ட மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்களுக்கு இதுவரை இந்த சம்பளம் கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2015 மார்ச் மாதம் வந்தால், ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், தேர்தல் பணிக்கான சம்பளத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர் அரசு ஊழியர்கள்.

இது குறித்து தேர்தல் மண்டல அலுவலராக பணியாற்றிய அரசு அலுவலர் ஒருவர் கூறுகையில், தேர்தல் தொடங்கும் முன்பிருந்து, தேர்தல் முடியும் வரை ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றியுள்ளோம். தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அடுத்தபடியாக மண்டல அலுவலர்களாக பணியாற்றிய சுமார் 50-க்கும் அதிகமானோருக்கு சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை.

நிதி பற்றாக்குறை?

சார் ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்த போது, நிதிப் பற்றாக்குறை என தகவல் தெரிவிக்கின்றனர். தேர்தல் பணியாற்றிவர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூ.2.49 கோடி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x