Published : 02 Feb 2015 10:19 AM
Last Updated : 02 Feb 2015 10:19 AM
ஐஐடி மற்றும் ஐஐஎம் உள்ளிட்ட முக்கியமான கல்வி நிறு வனங்களில் இருந்து திறமையான வர்களை வேலைக்கு அமர்த்தும் வாய்ப்பு தங்களுக்கு தேவை என்று எஸ்.பி.ஐ. கேட்டிருக்கிறது.
இதுபோன்ற முக்கியமான கல்வி நிறுவனங்களில் திறமையான மாணவர்கள் இருக்கிறார் கள். ஆனால் கல்வி நிறுவனங்களில் நேரடியாக வளாகத் தேர்வு நடத்த பொதுத்துறை வங்கிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
பொதுத் துறை வங்கிகளில் இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் நேரடி யாக வளாகத்தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்திருக்கிறார்.
உச்ச நீதிமன்ற ஆணைப்படி, பொதுத்துறை வங்கிகள் நேரடியாக வளாகத்தேர்வு நடத்த முடியாது. இந்த வங்கிகளில் நிரப்பப்படும் ஒவ்வொரு வேலை வாய்ப்பும், விளம்பரப்படுத்தி, அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.
பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களுடைய வரிப்பணம் இது போன்ற நிறுவனங்களுக்கு செல்கிறது. ஆனால் இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து எங்களால் திறமையான பணி யாளர்களை எடுக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது என்றார்.
இது பொதுத்துறை நிறுவனங்களுக்கு உள்ள தடையாகும். இதனால் முறையற்ற போட்டி இருக்கிறது. இருந்தும் கூட பொதுத்துறை வங்கிகள் சிறப் பாக செயல்பட்டு வருகின்றன. இதுபோன்ற தடைகள் இல்லாத பட்சத்தில் எங்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT