Last Updated : 07 Feb, 2015 12:09 PM

 

Published : 07 Feb 2015 12:09 PM
Last Updated : 07 Feb 2015 12:09 PM

உருக்குலைகிறதா உக்ரைன்?- 6

தனது உரையில் கிரிமியா ஒரு புனிதத்தலம் என்றிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். அதாவது ஜெருசலேம் நகர அளவுக்கு அவருக்கு அது புனிதமானதாம். தான் ஞானஸ்நானம் பெற்றது கிரிமியாவில்தான் என்பதை வேறு நினைவுகூர்ந்திருக்கிறார்.

பல ரஷ்யர்களுக்கு புதினின் ஞானஸ்நான விஷயமே தெரியாது. கிரிமியா தீபகற்பம் மதக் காரணங்களால் அறியப்பட்ட தில்லை.

‘’உண்மையில் உக்ரைனில் நாம் காட்டும் ஈடுபாட்டுக்கும், அமெரிக்கா நமக்கு விதித்திருக்கும் பொருளாதாரத் தடைக்கும் ஒரு தொடர்பும் இல்லை. எப்படியாவது நம்மை பலவீனமாக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் எண்ணம்.

உக்ரைன் இல்லா விட்டால் வேறு ஏதாவது காரணத் தைக் காட்டியிருக்கும்’’ என்றும் அந்த உரையில் கூறியிருக்கிறார்.

ரூபிளின் (ரஷ்ய நாணயம்) மதிப்பு வீழ்ந்து கொண்டிருப் பதுதான் ரஷ்ய மக்களின் முக்கியக் கவலையாக இருக்கிறது. ‘’உக்ரைன் கிடக்கட்டும். விலை வாசியைக் குறையுங்கள்’’ என்கி றார்கள்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு கருத்துக் கணிப்பில் உக்ரை னில் ரஷ்ய ராணுவம் நுழைந்தது சரிதான் என்று கூறும் மக்களின் சதவீதம் (கடந்த பத்து மாதங்களில்) 74-ல் இருந்து 23 ஆக குறைந்துள்ளது. தங்கள் நாடு உலக அரங்கில் தனிமைப் படுத்தப்படுவதாக வருத்தப்படுகி| றார்கள்.

இந்த தனிமைப்படுத்துதல் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் என்று விருப்பப்படு கிறார்கள் உக்ரைனிய ஆட்சி யாளர்கள். ‘’பிரான்ஸ் தனது போர்க் கப்பல்களை ரஷ்யாவிற்கு விற்கக் கூடாது. டாலர், யூரோ, ஸ்டெர்லிங் ஆகியவற்றிலிருந்து ரஷ்ய நாணயம் தனிமைப் படுத்தப்பட வேண்டும். அதாவது ரஷ்ய நாணயத்தை பிற நாடுகள் ஏற்கக் கூடாது’’ என்று அவர்கள் கூறத் தொடங்கியிருக்கிறார்கள்.

மே 25 அன்று நடைபெற்ற உக்ரைன் தேர்தலில் பெட்ரோ போரோஷென்கோ என்பவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ‘’நான் ஆட்சிக்கு வந்தால் உக்ரைன் ஒன்றிணைந்து உறுதி யாக இருக்கும். கலவரங்களை அடக்குவேன்’’ என்று தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தார். ஆனால் கலவரம் தொடர்கிறது.

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள வீடுகளின் மீதெல் லாம் (அரசுக்கெதிரான கிளர்ச்சி யாளர்கள் அதிகம் உள்ள பகுதி) உக்ரைன் அரசு குண்டுகளை எறிகிறது என்கின்றனர் ரஷ்யப் புரட்சியாளர்கள். இதை உக்ரைன் மறுக்கிறது. அதேசமயம் ரஷ்யப் புரட்சியாளர்களின் செயல்பாடு ராணுவத்தை இயங்க வைத்து விடும் அபாயத்துக்கு அடிகோலு கிறது என்றும் கூறுகிறது.

உக்ரைனுக்குத் தொடர்ந்து எரிவாயுவை அளித்துக் கொண்டி ருந்த ரஷ்யா அதன் விலையை 80 சதவீதம் உயர்த்தியது. தவிர தனக்கு ஏற்கனவே உக்ரைன் தரவேண்டிய ஏராளமான பாக்கித் தொகையை உடனே செலுத்தியாக வேண்டும் என்கிறது ரஷ்யா. இல்லையென்றால் எரிவாயு அனுப்புவதை நிறுத்தி விடுமாம்.

எரிவாயு இறக்குமதிக்காக உக்ரைன் ரஷ்யாவுக்கு அளிக்க வேண்டிய பாக்கித் தொகை எவ்வளவு தெரியுமா? 195 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகம்! ரஷ்யா மேலும் இரண்டு நிபந்தனை களையும் விதித்துள்ளது. இனி முன்வைப்புத் தொகையை உக்ரைன் செலுத்தினால் மட்டுமே மீண்டும் எரிவாயு விநியோகம் செய் யப்படும்.

உக்ரைன் வழியாகச் செல்லும் குழாய்களின் மூலம் இனி ஐரோப்பிய யூனியனில் இருக்கும் ரஷ்யாவின் பிற வாடிக்கை யாளர்களுக்கும் எரிவாயு விநியோ கம் செய்யப்படும்.

அது மட்டுமல்ல, துருக்கி கிரீஸ் எல்லைப் பகுதி வழியாக ஒரு மிக நீண்ட பைப்லைனை உருவாக்கப் போகிறதாம். இதன்வழியாகத்தான் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்பப்படுமாம். மூன்று வருடங்களில் உருவாகும் இதன் நோக்கம் உக்ரைனைத் தவிர்ப்பதுதான்.

ரஷ்யா உக்ரைன் மோதலில் நேட்டோ அமைப்பின் (North Atlantic Treaty Organisation) பங்கும் வெகுவாக அலசப்படுகிறது. 2008-ல் இந்த அமைப்பு உக்ரைனையும் ஜார்ஜியாவையும் தாங்கள் உறுப்பினர்களாக அனுமதிக்கப் போவதில்லை என்று அறிவித்தது. இதன் பிறகு ரஷ்யா, உக்ரைனுக்கிடையே கொஞ்சம் நல்லுறவு மலர்ந்ததுபோல இருந்தது.

ஆனால் 2008-ல் ஜார்ஜியாவை ஆக்ரமித்தது ரஷ்யா. அதற்கு அடுத்த ஆண்டே உக்ரைனை ரஷ்யா எச்சரித்தது ‘‘அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ நாடுகளுடன் எந்தவித ராணுவப் பயிற்சியையும் மேற்கொள்ளக் கூடாது’’ என்றது.

சென்ற ஆண்டு இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் உக்ரைனுக்குப் பல விதங்களில் உதவுவது என்று தீர்மானித் திருக்கிறார்கள். நேட்டோ உறுப்பினர்களில் அமெரிக்காவும் உண்டு.

இப்படி உதவ முன்வந்ததற்கு ரஷ்யாவுடனான பழைய பகை மையும் ஒரு காரணம் என்றா லும் உக்ரைனின் வெளிப்படை யான வேண்டுகோளும் ஒரு காரணம். உக்ரைன் அரசு ‘’நேட்டோ மட்டும்தான் எங்களை இப்போது காக்கக் கூடிய அமைப்பு’’ என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது.

ஆனால் நேட்டோ உடன்படிக்கையின்படி அதன் உறுப்பினர் நாடுகள் மட்டுமே ஒருவருக்கொருவர் உதவ முடியும். உக்ரைன் நேட்டோவின் உறுப்பினர் அல்ல.

இதனால் நேட்டோ அதிகாரிகள் ‘’நாங்கள் ஓர் அமைப்பாக எந்த ராணுவ உதவியையும் உக்ரைனுக்குச் செய்ய மாட்டோம்’’ என்கிறார்கள்.

ஆனால் நேட்டோவின் உறுப்பினர் நாடுகள் அப்படி ராணுவ உதவி செய்வதைப் பற்றி அவர்கள் கருத்து கூற மாட்டார்களாம். அதாவது ‘நீ அவனை அடிக்கக்கூடாது. ஆனால் அப்படி அடித்தால் நான் கண்டுக்கவே மாட்டேன்’ என்கிற கொள்கை.

உக்ரைனைச் சுற்றி ஆயிரம் ரஷ்ய ராணுவ வீரர்கள் பலவித ஆயுதங்களோடு சூழ்ந்துள்ளனர். போதாக்குறைக்கு உக்ரைனுக்குள் ராணுவ சீருடையின்றி ரஷ்யா என்ற பெயர் பொறிக்கப்படாத போர்த் தளவாடங்களுடனும் ரஷ்ய வீரர்கள் ஊடுருவி உள்ளனர்.

தன்னுடைய எல்லையைப் பல்வேறு திசைகளில் அதிகரித்துக் கொள்ள ரஷ்யா முயற்சி செய்கிறது. முதலில் ஜார்ஜியா, அடுத்ததாக கிரிமியா இப்போது கிழக்கு உக்ரைன். உக்ரைனிலேயே ரஷ்ய ஆதரவாளர்கள் கணிசமாக இருப்பதால் பிரச்சினை இப்போ தைக்குத் தீரப் போவதில்லை.

(அடுத்ததாக - சின்ன நாடு சிலுவை நாடு)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x