Published : 23 Jan 2015 01:16 PM
Last Updated : 23 Jan 2015 01:16 PM

சவுதி அரேபியா ஒரு நல்ல தலைவரை இழந்துள்ளது: பிரணாப் இரங்கல்

சவுதி அரேபியா ஒரு நல்ல தலைவரை இழந்துள்ளது என அந்நாட்டு மன்னர் அப்துல்லா மறைவுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டரில்: "சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா மறைவினால் சோகத்தில் ஆழ்ந்துள்ள மன்னரின் குடும்பத்திற்கும், சவுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது மறைவால், சவுதி அரேபியா ஒரு நல்ல தலைவரை இழந்துள்ளது, இந்தியா நல்ல நண்பரை இழந்துவிட்டது, உலகம் ஒரு மூத்த அரசியல்வாதியை இழந்துவிட்டது.

மன்னர் அப்துல்லா இந்தியா மீதும் இந்திய மக்கள் மீதும் உண்மையான அன்பும் பாசமும் வைத்திருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x