Published : 04 Jan 2015 12:41 PM
Last Updated : 04 Jan 2015 12:41 PM
ஆம் ஆத்மி ஆதரவாளர்களுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோத லின்போது துக்ளகாபாத் தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட் பாளரின் காருக்கு தீ வைக்கப் பட்டது.
தொலைக்காட்சி தரப்பில் படமெடுக்கப்பட்ட விவாத மேடை நிகழ்ச்சியில் இரு கட்சித் தலைவ ர்களும் காரசாரமாக வாக்குவாதம் நடத்தினர். இது ஒரு கட்டத்துக்கு பிறகு அடிதடி, மோதலாக மாறி யது. அப்போது ஆம் ஆத்மி வேட்பாளர் சகிராமின் காருக்கு தீவைக்கப்பட்டது.
இதுபற்றி விசாரணை நடத்தப் படுவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, காருக்கு தீ வைக்கப்பட்டதால் ஆத்திரமுற்ற ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் கோவிந்த புரிகாவல் நிலையம் சென்று பாஜக ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த பகுதியில் உள்ள பாஜக தலைவரின் தூண்டுதலால் காருக்கு தீ வைக்கப்பட்டதாகவும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாஜக எம்பி ரமேஷ் பிதுரியின் ஆதர வாளர்கள் என்றும் புகார் கூறினர்.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர்தான் வன்முறையிலும் மோதலிலும் ஈடுபட்டதாக பிதுரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT